மேலும் அறிய

Paranthur Airport: அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்த கிராம மக்கள்; என்னதான் நடக்கிறது பரந்தூரில் ?

"நாளை சாலை மறியல் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப் போவதாக போராட்ட குழுவினர் அறிவிப்பு.

பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்ய வரும் தமிழக அரசின் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். நாளை சாலை மறியல் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப் போவதாக போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.
 
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்று வட்டார 13 கிராமங்களை உள்ளடக்கிய 4791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான பணிகளை துவக்கி உள்ளது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி ஏகனாபுரம் மற்றும் பாதிக்கப்படும் கிராம மக்கள் 425  நாட்களாக  பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 
Paranthur Airport: அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்த கிராம மக்கள்; என்னதான் நடக்கிறது பரந்தூரில் ?
 
இந்நிலையில், பரந்தூர் சுற்று வட்டார கிராம பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்ய தமிழக அரசின் சார்பில் பேராசிரியர் மச்சநாதன் தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் வருகிற 26-ஆம் தேதியன்று விமான நிலைய அமைய உள்ள இடத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் குழு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (24-09-23) ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல்,கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
 
சென்னை பசுமை விமான நிலையம்..
 
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

Paranthur Airport: அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்த கிராம மக்கள்; என்னதான் நடக்கிறது பரந்தூரில் ?
 
இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும், மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு  ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி ,குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

ஓராண்டை கடந்த தொடர் போராட்டம்

இந்நிலையில் 400-வது  நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் ஊர் மைதானத்தில் ஒன்றுகூடி கண்ணில் கருப்புக்கொடி கட்டிக்கொண்டு,கைகளில் கறுப்பு கொடி ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏற்றி கைகளில் ஏந்தியவாறு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Paranthur Airport: அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்த கிராம மக்கள்; என்னதான் நடக்கிறது பரந்தூரில் ?

கிராம மக்கள் கூறுவது என்ன ?

இதுகுறித்து கிராமத்தை சேர்ந்த இளைஞர் கவாஸ்கர் கூறியது, ”டெல்லியில் விவசாயிகள் ஓராண்டு காலம் மட்டுமே போராடினார்கள். ஆனால் எங்கள் கிராம மக்கள் ஓர் ஆண்டை கடந்து போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம். கிராம மக்களின் வீடுகளை அழித்தும், விவசாய நிலங்களையும் அழித்தும் விமான நிலையம் அமைப்பதற்கான தேவை என்ன இருக்கிறது? மக்கள் தொகை பெருகிவரும் இந்த சூழலில், விவசாய நிலங்களை தான் அதிகரிக்க வேண்டும். தரிசு நிலங்களில் விமான நிலையம் அமைத்துக் கொள்ளட்டும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
Embed widget