மேலும் அறிய

Diwali 2023: பிறந்தது தீபாவளி! கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை - பூஜை பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள்!

காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் மல்லிகை பூ மற்றும் கனகாபூரம் பூ கிலோ நேற்று 600 விற்பனை செய்த நிலையில் இன்று ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். அமாவாசையின் போது, கடவுள்களை வழிப்பட்டு, மக்கள் ஒருவருக்கொருவர் வீட்டிற்கு சென்று பலகாரங்களை பரிமாறி கொள்கின்றன. புதிய ஆடைகளை அணிந்துகொண்டு வீட்டிற்குள் தீபங்களும், வீட்டிற்கு வெளியே விளக்குகளை ஏற்றியும் தீபாவளியை கொண்டாடுகின்றன.

களைகட்டும் தீபாவளி:

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நவம்பர் வரை தீபாவளிக்கான தேதிகள் மாறுபடும். இந்தநிலையில், இன்று நாடுமுழுவதும் நவம்பர் 12ம் தேதியான இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து கோயில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்தாண்டு புதிதாக திருமணமானவர்கள் தங்களது மாமியார் வீட்டில் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தீபாவளி நாளான இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரத்தில் பூ விலை உயர்வு

தீபாவளி பண்டிகையின் காரணமாக பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இன்றையை தினம் தீபாவளி வருவதனால் புதுமணத் தம்பதிகள் மற்றும் இல்லங்களில் தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் இன்று பூக்களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் மல்லிகை பூ மற்றும் கனகாபூரம் பூ கிலோ நேற்று 600 விற்பனை செய்த நிலையில் இன்று ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாமந்திப்பூ ரோஜா பூ கிலோ 300 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. மேலும் தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்வு அதிகமாகி வருகிறது.
 

Diwali 2023: பிறந்தது தீபாவளி! கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை - பூஜை பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள்!
பூக்கடை சத்திரம் பகுதியில் போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாததால் பூக்களை வாங்கிட வருகை தருவோரும், பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிட வருகை தருவோரும் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்லும் நிலையானது ஏற்பட்டுள்ளது.

12 லட்சத்திற்கு மேலானோர் சொந்த ஊர்களுக்கு பயணம்: 

தீபாவளி பண்டிகை எதிரொலியாக சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர்கள் தத்தம் விருப்பமான கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் செய்து வருகின்றன. 

 

தீபாவளி சிறப்பு ரயில்கள்: 

தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை - தாம்பரம் இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 8.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது. அதேபோல், தீபாவளி பண்டிகை முடித்து ஊர் திரும்புவோருக்கு ஏதுவாக நாளை நெல்லையில் இருந்து சிறப்பு ரயிலும் இயக்கப்பட இருக்கிறது. திருநெல்வேலியிலிருந்து நாளை மாலை 3.45க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயிலானது தென்காடி, ராஜபாளையம், சிவகாசி, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

தீபாவளி - நாளை அரசு விடுமுறை: 

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 18ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget