மேலும் அறிய

கொளத்தூரை கலக்கும் தரணி விநாயகர் மற்றும் மஞ்சள் விநாயகர் - பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து தரிசனம்

கொளத்தூரை கலக்கும் தரணி விநாயகர் மற்றும் மஞ்சள் விநாயகர். ஆச்சரியத்துடன் பார்த்து பொதுமக்கள் தரிசனம்

இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு , பல்வேறு பகுதிகளில் அலுவலகம் மற்றும் வீடுகள் , தெருக்களின் சந்திப்பு மற்றும் சாலை பகுதியில் விநாயகர் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. 

பொது மக்கள் மற்றும் நண்பர்கள் குழு அவர்கள் இருக்கும் பகுதிகளில் பெரியதாக விநாயகர் சிலை வைப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட்டு விநாயகர் சிலை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கப்படும் போது அனைவரின் கவனம் ஏற்க்கும் வகையில் வித்தியாசமாக விநாயகர் உருவாக்கப்பட்டு , வழிபாட்டிற்காக வைக்கின்றனர். அவ்வாறு வித்தியாசமாக இருக்கும் போது பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து விநாயகரை வணங்கி விட்டு செல்வார்கள்.

இந்த வகையில் , சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் சந்திப்பு அருகே இந்து இளைஞர் எழுச்சி நற்பணி மன்றம் தரணி விநாயகர் குழு சார்பில் தரணி விநாயகர் வைக்கப்பட்டுள்ளது.

40 அடி உயரமுள்ள இந்த தரணி விநாயகர் காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் தாம்புல தட்டுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 901 காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் 4500 தாம்பூல தட்டு 3200 சங்கு கொண்டு 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 21 நாட்களில் இந்த விநாயகர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

9 நாட்கள் இந்த விநாயகர் வைக்கப்பட்டு அதன் பிறகு பிரித்து பக்தர்களுக்கு காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் தாம்பூல தட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

இதே போன்று சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஸ்ரீ கணேச அறக்கட்டளை சார்பில் மங்கள மூர்த்தி விநாயகர் வைக்கப்பட்டுள்ளது. 500 கிலோ மஞ்சள் மற்றும் மூங்கிலால் சயன கோளத்தில் இந்த விநாயகர் வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை இந்த விநாயகர் பிரிக்கப்பட்டு மஞ்சள் அப்பகுதி மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

இதே போன்று சென்னை கொளத்தூர் கென்னடி சதுக்கம் பகுதியில் கென்னடி சதுக்க நண்பர்கள் குழு சார்பில் வெற்றி விநாயகர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் பிஸ்கட் விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க பிஸ்கட்டால் இந்த விநாயகர் செய்யப்பட்டுள்ளது. 3060 பிஸ்கட் மற்றும் மூங்கில் கொண்டு இரண்டு லட்ச ரூபாய் செலவில் 18 நாட்களில் இந்த விநாயகர் செய்து முடிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் கழித்து இந்த விநாயகர் பிரிக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு பிஸ்கட் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு கொளத்தூர் தொகுதியில் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ள இந்த மூன்று விநாயகர்களையும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்து வருகின்றனர்.

இதே போல் சென்னை வளசரவாக்கம் பகுதியில் விவசாய விநாயகர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் தலையில் தலைப்பாகை அணிந்து , கையில் மண்வெட்டி மற்றும் கலப்பை வைத்து கொண்டு இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE
Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Embed widget