Chennai Power Shutdown: சென்னைல ஜனவரி 23-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
Chennai Power Cut(23-01-2026): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜனவரி 23-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதவரம்
தோல் எஸ்டேட், ஜம்பிள் நியூ காலனி, ரவி கார்டன், கே.கே.ஆர் கார்டன், கண்ணபுரம், ஆர்.சி. லிட்டில் விங்ஸ், ஆர்.சி. மேத்தா, ஆர்.சி. லாரல்ஸ், பழனியப்பா நகர், மேத்தா நகர், அலெக்ஸ் நகர், ஏ முதல் டி காலனி, பத்மாவதி நகர் மற்றும் விரிவாக்கம், தெற்கு தொலைபேசி காலனி, பாஷியம் நகர்.
திருமுடிவாக்கம்
இந்திரா நகர், குரு நகர், விவேகநாத நகர், பழந்தண்டலம், நாகன் தெரு மற்றும் அனைத்துக்கும் மேலாக சுற்றியுள்ள பகுதிகள்.
ஜிஎன்டி சாலை
விஜிபி சந்தோஷ் நகர், பிருந்தாவன் கார்டன், ஐயர் தோட்டம், சாமியார் தோட்டம், தணிகாசலம் நகர் F பிளாக், அண்ணா சாலை, காமாட்சி நகர், வாசுதேவன் தோட்டம், Voc தெரு, காமராஜ் சாலை 1 முதல் 4-வது தெரு.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















