மேலும் அறிய

Chennai Metro Rail: விரைவில் சென்னை மெட்ரோ ரயிலில் டைனமிக் ரூட் மேப் வசதி!

Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயிலில் டைனமிக் ரூட் மேப் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் டைனமிக் ரூட் மேப் (Dynamic Route Maps) வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (( Chennai Metro Rail Limited) தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருவதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் 84.21 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்திருப்பதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்தக்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயணிகளின் வசதிற்கேற்ப பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்போது, சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு மெட்ரோ வழித்தடங்கள் குறித்த தகவலை வழங்க எல்.இ.டி. ஸ்கிரீன் அமைக்கப்பட உள்ளது. இதற்காக Nusyn டிஜிட்டல் சொல்யூசன்ஸ் உடன் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வசதி அடுத்தாண்டு தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி

சென்னையில் மெட்ரோ சேவை 9 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு வழித்தடங்களிலும் 600 டிரிப்கள் மேற்கொள்ளப்படுகிறது. கூட்டம் மிகுந்த நேரங்களின் பயணிகள் காத்திருப்பதை தவிர்க்க ரயில்களிம் எண்ணிக்கையை 36-இருந்து 46 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மெட்ரோ ரயிலில் டைனமிக் ரூட் மேப் ஸ்க்ரீன் முதல் இரண்டு Phase உடன் மற்ற பகுதிகளுகு இயக்கப்படும் மெட்ரோ வழித்தடங்கள் குறித்த தகவல்களும் அடங்கியிருக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது. விமானத்தில் பயன்படுத்தப்படும் முறையில் மெட்ரோ ரயிலில் அமைக்கப்பட உள்ளது.

வழித்தடங்களில் முக்கியமான இடங்கள் குறித்த தகவலும் இடம்பெற்றிருக்கும். அதோடு, ஒவ்வொரு ரயிலிலும் இதுபோன்ற 16 மேப்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக,ரயில் செல்லும் வேகம், அதோடு ரயிலுக்கு உள்ளே மற்றும் வெளியே வெப்பநிலை பற்றிய அறிவிப்பு உள்ளிட்டவைகளும் அதில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான முழு திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்கெட் சலுகை

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வழங்கியுள்ள க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.  வாட்ஸ்அப் டிக்கெட் (+91- 83000 86000 ) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 'Peak Hours' 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வரும் நிலையில், மாதவரம்-சிறுசேரி, பூந்தமல்லி-கலங்கரை விளக்கம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் மெட்ரோ பயணிகள் நடந்து வருகிறது. சென்னை மாநகரம் முழுவதும் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பயணிகள் நிறைவடைந்தால் மெட்ரோ இரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.

7 நிமிட இடைவெளியில் ரயில் சேவை

அதிகரித்து வரும் மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாமல் மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. இப்போது, 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மழை பெய்யும் நேரங்களில் மக்களின் வசதிக்கு ஏற்ப நெரிசல்மிகு நேரங்களில் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget