Chennai Rain : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றைய மழை நிலவரம் இதுதான்.. உடனே செக் பண்ணுங்க..
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை அடுத்த 2 மணி நேரம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதையடுத்து அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை அடுத்த 2 மணி நேரம் தொடரும்
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 27, 2022
கன மழை பெறும் மாவட்டங்கள்:
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 27, 2022
மேலும் கூடுதல் தகவல்களுக்கு வானிலை மைய இணையதளத்தை பார்க்கவும். tamilrain_fc.pdf (imd.gov.in)
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில், காற்றானது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக் கூடும் என்பதால், அடுத்த 3 நாட்களுக்கு இப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 27, 2022
View this post on Instagram
ட்ரெண்டிங் செய்திகள்





















