மேலும் அறிய

சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை..!

சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் எந்தெந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற புதிய உத்தரவை தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா பிறப்பித்துள்ளார்.

இதன்படி ஆதிதிராவிட பெண்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் சென்னை மாநகராட்சியும், தாம்பரம் மாநகராட்சியும் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சி ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த ( ஆண்/பெண்) மட்டுமே போட்டியிடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை..!

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர் மாநகராட்சி, திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி, வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட வேலூர் மாநகராட்சி, கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர் மாநகராட்சி, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட சிவகாசி மாநகராட்சி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி, மதுரைக்குட்பட்ட மதுரை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட ஈரோடு மாநகராட்சி பொதுப்பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை..!

தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவால் சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆதிதிராவிட பெண் போட்டியாளர்கள் மட்டுமே அனைத்தக்கட்சியிலும் போட்டியிடும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதனால், சென்னை மாநகராட்சியின் மேயராக உதயநிதி ஸ்டாலின் ஆவார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், இப்போது முதல் தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சியின் மேயர் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிற மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களை தயார் செய்யும் பணியிலும் அந்தந்த கட்சித்தலைமை களமிறங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டுமே நடைபெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் மீதம் உள்ள மாநகராட்சிகளான திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, ஓசூர், நாகர்கோயில், கும்பகோணம் ஆகிய மாநகராட்சிகளில் வழக்கம்போல போட்டியிடுபவர்களே போட்டியிட உள்ளனர்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளது. இந்த நிலையில், நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு வரும் 21-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல், ஒமிக்ரான் பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்; காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா சதி? அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்த சபாநாயகர்!
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்; காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா சதி? அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்த சபாநாயகர்!
ADMK : ’அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிடும் அதிமுக’ தேர்தல் வியூகத்தில் EPS..!
’அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிடும் அதிமுக’ தேர்தல் வியூகத்தில் EPS..!
Tamil Nadu cabinet meeting: அடித்தது ஜாக்பாட்.! 55ஆயிரம் பேருக்கு வேலை... ரூ. 34 ஆயிரம் கோடியில் 15 தொழில் முதலீடுகள்- அமைச்சரவை ஒப்புதல்
அடித்தது ஜாக்பாட்.! 55 ஆயிரம் பேருக்கு வேலை... ரூ. 34 ஆயிரம் கோடியில் 15 தொழில் முதலீடுகள்- அமைச்சரவை ஒப்புதல்
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
ABP Premium

வீடியோ

Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |
US Trade Deal with India | ட்ரம்ப் விரித்த வலை ரஷ்யா நட்பை முறிக்கும் இந்தியா? மோடி முடிவின் பின்னணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்; காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா சதி? அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்த சபாநாயகர்!
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்; காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா சதி? அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்த சபாநாயகர்!
ADMK : ’அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிடும் அதிமுக’ தேர்தல் வியூகத்தில் EPS..!
’அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிடும் அதிமுக’ தேர்தல் வியூகத்தில் EPS..!
Tamil Nadu cabinet meeting: அடித்தது ஜாக்பாட்.! 55ஆயிரம் பேருக்கு வேலை... ரூ. 34 ஆயிரம் கோடியில் 15 தொழில் முதலீடுகள்- அமைச்சரவை ஒப்புதல்
அடித்தது ஜாக்பாட்.! 55 ஆயிரம் பேருக்கு வேலை... ரூ. 34 ஆயிரம் கோடியில் 15 தொழில் முதலீடுகள்- அமைச்சரவை ஒப்புதல்
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, தேதி- முழு விவரம்!
அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, தேதி- முழு விவரம்!
ஹனிமூன் 2.0.. கணவனை முடித்த மனைவி..! இடிக்காத கார், திருடுபோகாத நகை- காதலனுடன் சிக்கியது எப்படி?
ஹனிமூன் 2.0.. கணவனை முடித்த மனைவி..! இடிக்காத கார், திருடுபோகாத நகை- காதலனுடன் சிக்கியது எப்படி?
Pollachi Dindigul 4 lane project : பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
’’பேரு வச்சியே சோறு வச்சியா’’ விடுதி மாணவிகளுக்கு வெறும் சோறு, ஊறுகாய்! அன்புமணி கடும் சாடல்
’’பேரு வச்சியே சோறு வச்சியா’’ விடுதி மாணவிகளுக்கு வெறும் சோறு, ஊறுகாய்! அன்புமணி கடும் சாடல்
Embed widget