மேலும் அறிய

Crime: திருப்போரூர் அருகே பரபரப்பு; மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் பாலியல் கொடுமையா? - நிர்வாகி கைது

மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் , திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, காப்பக நிர்வாகி வீரமணியை கைது செய்தனர்.


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான மன வளர்ச்சி குன்றியோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டிலிருந்து இந்த காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தை அதன் நிறுவனரான வீரமணி என்பவர் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில், தற்பொழுது பெண்கள், முதியோர், மனவளர்ச்சி குன்றியோர் என 50க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இந்நிலையில் இந்த காப்பகத்தில் வசிக்கும் பெண் ஒருவரிடம் காப்பக நிர்வாகியான வீரமணி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் whatsapp வாயிலாக புகார் ஒன்றில் பதிவு செய்தார். இந்த பதிவின் அடிப்படையில், தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் விசாரணை நடத்தி, அந்த புகாரில் உண்மை இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .

இதன் அடிப்படையில் நேற்று இரவு 12 மணி அளவில் வருவாய் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும், காப்பகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு இருந்தவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மனவளர்ச்சி குன்றிய பெண்களிடம் காப்பக நிர்வாகி வீரமணி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் வீரமணியை, இன்று காலை 8 மணியளவில் காப்பகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, காப்பக நிர்வாகி வீரமணியை போலீசார் கைது செய்தனர்.

இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்கள் மாற்றுத்திறனாளிகள் மனவளர்ச்சி குன்றியோரை வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்ய ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. மேலும், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 37 பேரை வேறு காப்பகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே காப்பகத்தை செங்கல்பட்டு எஸ்பி சாய் பிரனீத், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் பார்வையிட்டனர். காப்பகத்திற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது, பெண்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா ? மனவளர்ச்சி குன்றியோரை கவனிக்க உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து, விசாரணை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். தற்போது இந்த காப்பகம் அரசு புறம்போக்கு நிலத்தில், செயல்பட்டு வருவதால் காப்பகத்திற்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget