மேலும் அறிய

திருமண மண்டபத்தில் அதிர்ச்சி !! கழிவறையில் கேட்ட அலறல் சத்தம் !! வில்லன் யார் தெரியுமா ?

திருமண மண்டபத்தில் பெண்கள் உடை மாற்றுவதை செல்போன் மூலம் பதிவு செய்த நபர் கைது.

திருமண மண்டபத்தில் அதிர்ச்சி !! கழிவறையில் கேட்ட அலறல் சத்தம் !! வில்லன் யார் தெரியுமா ?

சென்னை OMR செம்மஞ்சேரி பகுதியில் குடும்பத்தாருடன் வசித்து வரும் 50 வயது பெண் ஒருவர் கடந்த 14 ம் தேதி அன்று சேத்துப்பட்டு மெக்னிக்கல்ஸ் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

இவர் திருமணத்திற்கு தயாராவதற்காக திருமண மண்டபத்தில் உள்ள கழிவறையில் உடைகளை மாற்றிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியே ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுப்பது தெரிய வரவே, அப்பெண் சத்தம் போட்டதும் அருகே இருந்த நபர்கள் அந்த நபரை பிடித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசாரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம்(IT Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வேளச்சேரி பகுதியை சேர்ந்த பிரபு ( வயது 29 ) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பிரபு, திருமணத்திற்கு அலங்காரம் செய்ய வந்த பெண்ணின் கணவர் என்பதும் அவரது செல்போனை ஆய்வு செய்த போது கடந்த இரண்டு நாட்களாக திருமண மண்டப கழிவறையில் பலமுறை இதே போல் வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட பிரபு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது. சுமார் ரூ.10,000 மதிப்புள்ள 360 வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் பறிமுதல்

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் வடக்கு கடற்கரை, இராஜாஜி சாலை, பர்மா பஜார் பகுதியில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி பையுடன் நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்து சோதனை செய்த போது, அவர்கள் சட்ட விரோத விற்பனைக்காக வெளிநாட்டு சிகரெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அதன் பேரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரபாகரன், ( வயது 32 ) மற்றும் பிரகாஷ் ( வயது 30 ) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.10,800 மதிப்புள்ள ESSE Special Gold , ESSE Light மற்றும் Win ஆகிய 360 வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

" கிருஷ்ணனிடம் இல்லாத ஒரே ஒரு குணம் மெத்தனம் " - பர்வீன் சுல்தானா பேச்சு
15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
Chennai power cut: சென்னையில் நாளை (11-7-2026) எங்கு மின்தடை இருக்கும்? எத்தனை மணி நேரம்?
சென்னையில் நாளை (11-7-2026) எங்கு மின்தடை இருக்கும்? எத்தனை மணி நேரம்?
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget