Egg Half Boil ; ஆப் - பாயில் சாப்பிடாதீங்க !! அமைச்சர் கொடுத்த வார்னீங் !!
பறவை காய்ச்சலால் ஹாஃப் பாயில் சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது. இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும் - மா.சுப்ரமணியன்

ரூ. 8 கோடி செலவில் இருதய வடிகுழாய் ஆய்வகம்
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாவது இருதய வடிகுழாய் ஆய்வகம் ( Cardiac cath Lab) மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ;
உலகம் முழுவதும் இருதய நோய் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பே, WHO, ICMR போன்ற சுகாதார நிறுவனங்கள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.
கொரோனா பேரிடருக்கு பின்பு மிகப் பெரிய பாதிப்பை உலகம் சந்தித்து வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து தமிழக அரசு மிகச் சிறப்பாக எடுத்து வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இருதய நோய் சிகிச்சை கூறிய பிரிவுகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவது என்பது என் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கிண்டி நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இரண்டு இருதய வடிகுழாய் ஆய்வகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போல அரசு மதுரை ராஜாஜி மருத்துவமனையில், இரண்டு இருதய வடிகுழாய் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் 5 மாவட்டங்கள் இருதய வடிகுழாய்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், ஒரு இருதய வடிகுழாய் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் புதிதாக ஒரு இருதய வடி குழாய் ஆய்வகம் அமைக்கப்பட்டது. அந்த வகையில் இன்று ஏழாவதாக புதிய இருதய வடி குழாய் ஆய்வகம் ஒன்று ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மிக விரைவில் கடலூர் , நீலகிரி , திருவள்ளூர் , திருவண்ணாமலை , ராமநாதபுரம் ஆகிய ஐந்து இடங்களில் புதிய இதய வலிக் குழாய்வகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனுடைய பணி என்பது மாரடைப்பு சிகிச்சைகளில் மிக சிறப்பாக தனது பணியை செய்து வருகிறது, மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு கேத்லாக் மூலம் அடைப்புகளை உடனடியாக அகற்றி ரத்த ஓட்டத்தை சீராக்க இது உதவுகிறது.
அது மட்டுமல்லாமல் இருதய பாதிப்பு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் , இதய நாள அடைப்புகளை அகற்றுவதற்கு இது பயனுள்ளதாக இருந்து வருகிறது. பல்வேறு வகைகளில் பயனுள்ள இந்த இதய வடிகுழாய் ஆய்வகம், சுமார் எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆனது. இன்று ஓமந்தூரார் மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முன்பே இந்த மருத்துவமனையில் ஒரு இருதய வடிகுழாய்வகம் பயன்பாட்டில் இருந்தாலும், தினம்தோறும் 20 பேர் அதில் ப்ரசீஜர் செய்து கொள்ளும் நிலை இருந்துக் கொண்டு இருக்கிறது.
எய்ம்ஸ் கட்டுமான பணி இருதயாக முடிவடைவதற்கு 2028 ஆம் ஆண்டு ஆகும் என்று ஜப்பான் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து விட்டது. எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிடத்தை பார்க்காமலேயே ஒரு பேட்ச் மாணவர்கள் படித்து முடித்து வெளியே செல்ல இருக்கிறார்கள்.
ஆப்பாயில் சாப்பிட வேண்டாம்
பறவைக் காய்ச்சல் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. பறவைகள் இறந்தால் 5 அடி ஆழத்தில் புதைக்கவும் , இறந்த கோழிகளை சமைக்கவ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹாஃப் பாயில் சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது மற்றும் இறைச்சியை நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.























