மேலும் அறிய

நேரில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் - அடுத்து நடக்கப்போவது என்ன ?

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செந்தில்வேலன் காவல் ஆணையரகத்தில் ஆஜராகியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செந்தில்வேலன் காவல் ஆணையரகத்தில் ஆஜராகியுள்ளார். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில்வேலன் உட்பட ஐந்து பேர் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் ஆஜராகியுள்ளார்.

ரஹ்மானுக்கு இரண்டாவது முறை வந்த சோதனை

கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில்  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய தினம் பெய்த கனமழையால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தண்ணீர் பெருமளவு தேங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் ஒதுங்க கூட இடம் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனால் சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான், நிகழ்ச்சி வேறொரு நாளில் நடக்கும் என அறிவித்தார். 


நேரில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் - அடுத்து நடக்கப்போவது என்ன ?

அந்த வகையில் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் மறக்குமா இசை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக கடந்த முறை மழையில் சிக்கிய ரசிகர்களுக்கு இம்முறை மழை பெய்தால் தற்காத்துக்கொள்ள ரெயின்கோட் வழங்கப்பட்டது. இதனால் பெரும் ஆர்வமுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்களுக்கு  ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கு காரணம் அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் தான்.  

கடுப்பான ரசிகர் கூட்டம்

ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சி நடைபெறும் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் ஓ.எம்.ஆர். சாலையை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே மதியம் 2 மணியளவில் இருந்தே ரசிகர்கள் கார்களிலும், பைக்குகளிலும் வர தொடங்கியதால் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  போலீசார் சாலையின் இருபுறம் நின்று சரிசெய்தாலும் பல மணி நேரமாக வாகன நெரிசல் ஏற்பட்டது.

"அதிரடி உத்தரவிட்ட டிஜிபி "

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சங்கர் ஜிவால். இது தொடர்பான செய்தி குறிப்பில், ” சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பனையூர் பகுதியில் 10.09.2023 அன்று மாலை நடைபெற்ற இசைக்கச்சேரியின் போது அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டமும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இது தொடர்பாக விரிவான விசாரணை செய்ய தாம்பரம் காவல் ஆணையருக்கு தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


நேரில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் - அடுத்து நடக்கப்போவது என்ன ?

போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகமான கூட்டத்திற்கான காரணங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், மருத்துவ வசதிகள், நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் இந்நிகழ்ச்சி தொடர்பாக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற  குறைபாடுகள் ஏற்படாத வண்ணம் தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் காவல் துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் 

இந்நிலையில் நிகழ்ச்சி நடத்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வு செய்து நிகழ்ச்சி முன் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனத்தை விசாரிக்க அழைப்பு விடுத்த நிலையில், அவர்கள் ஆஜராகவில்லை. 


நேரில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் - அடுத்து நடக்கப்போவது என்ன ?
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, அவர் நிகழ்ச்சி ஏற்பாடு ஒரு வாரமாக நடைபெற்றது. எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் இருந்தது. 25000 இருக்கைகள் போடப்பட்டது. 40000 பேர் வரை வந்ததாக தெரிகிறது. சொந்த வாகனங்களில் அதிகப்படியானோர் வந்ததால் வாகனங்களை தடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணம் குறித்து விசாரிக்கவும், ஏற்பாடுகள் குறித்தும், எதிர்காலத்தில் இடைஞ்சல் இல்லாமல் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்படும். விழா ஏற்பாட்டு நிர்வாகிகளிடம் விசாரணை செய்ய உள்ளோம் என தெரிவித்தார்.
 
நேரில் ஆஜர்
 
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செந்தில்வேலன் காவல் ஆணையரகத்தில் ஆஜராகியுள்ளார். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில்வேலன் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் ஆஜராகியுள்ளார்.  அவருடன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஐந்து பேரும் ஆஜராகி உள்ளனர்.  ஏற்கனவே போலீசார் விசாரணை மேற்கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில்,  நேரில் ஆஜராகி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதுகுறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.  இதன் காரணமாக அலுவலகம் பரபரப்புடன் காணப்படுகிறது

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
Embed widget