மேலும் அறிய

திருமணத்தை மீறி நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு !! கணவனை தீர்த்து கட்டிய மனைவி

கணவனின் நண்பருடன் கள்ள உறவு வைத்து , மது அருந்த வைத்து கொலை செய்ய மனைவிழ

தனியார் நிறுவன பாதுகாவலர்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கோனூரைச் சேர்ந்த அல்லாட நாகராஜி ( வயது 39 ) மற்றும் ரம்யா ( வயது 36) ஆகியோர் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு விசாகப்பட்டினத்திற்கு வந்து மதுரவாடாவின் பகுதியில் வசிக்கின்றனர்.

நாகராஜி ஒரு தனியார் பாதுகாவலராக பணிபுரிகிறார். ஸ்ரீகாகுளம் மாவட்டம் தெக்கலி பகுதியைச் சேர்ந்த வசந்த ராவ் (வயது 31) உடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. வசந்த ராவ் விசாகப்பட்டினம் காஞ்சரபாலம் தர்ம நகரில் வசிக்கிறார்.

திருமணம் மீறிய உறவு

வசந்த ராவ் நாகராஜிவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் போது ரம்யாவுடன் திருமணத்திற்குப் அப்பால் உறவு ஏற்பட்டது. சில மாதங்கள் கழித்து நாகராஜி இதை கவனித்து மனைவியைக் கண்டித்தார். ஆனால் ரம்யா நடத்தை மாறவில்லை, மேலும் தன் காதலன் வசந்தராவுடன் கணவரை கொலை செய்ய முடிவு செய்து வசந்த ராவிடம் தெரிவித்துள்ளார்.

நாகராஜிவைக் கொல்ல விரும்பிய வசந்த ராவ், ஐயப்பனுக்கு மாலை அணிந்த போது ராம்பாபு மற்றும் பாண்டு என்ற இரண்டு பேருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது நாகராஜிவை கொலை செய்யும் திட்டத்தை கூறினர். இதனையடுத்து ஐயப்ப மாலை கழற்றிய பிறகு நாகராஜிவை கொலை செய்ய மூவரும் முடிவு செய்தனர்.

திட்டமிட்டு மது அருந்த அழைத்த நண்பர்

கொலை செய்ய ரம்யாவும் , வசந்த ராவும் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்தனர். திட்டமிட்டப்படி ஐயப்ப மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று வந்ததும், மது அருந்துவதற்கு அடிமையான நாகராஜிவை வசந்த ராவ் திட்டமிட்டபடி மது அருந்த அழைத்தார். அதற்கு முன், வசந்த ராவ் ஒரு ஹோட்டலில் அறை முன்பதிவு செய்து அங்கு அழைத்து சென்று அனைவரும் மது அருந்தினர்.

அதிகமாக மது அருந்திய குடிபோதையில் இருந்த நாகராஜிவை அனைவரும் சேர்ந்து தலையணையால் முகத்தை மூடி அவரை மூச்சுத் திணறடித்து கொலை செய்தனர். பின்னர் வாடகை பைக்கை பெற்று வந்து நாகராஜி உடலை ஹோட்டல் அறையில் இருந்து பைக்கில் கொண்டு செல்லப்பட்டு, திம்மாபுரம் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று வீசி உள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்

நாகராஜிவைக் கொல்ல விரும்பிய ரம்யா உட்பட நான்கு குற்றவாளிகளும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். அதில் சமீப காலமாக செல்போன் டவர் சிக்னல்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

கொலை நடந்த நாளில், ரம்யாவும், வசந்த ராவும் ஒரு நாள் முழுவதும் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தவில்லை. சந்தேகத்தைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். நாகராஜி கொலைக்குப் பிறகு, ரம்யா பி.எம்.பாலம் காவல் நிலையத்திற்குச் சென்று, தனது கணவர் காணவில்லை என்றும், அவர் ஒரு மதுவுக்கு அடிமையாகி இருந்ததாகவும், வீட்டிலிருந்த தங்க நகைகளையும் எடுத்துச் சென்றதாகவும் புகார் அளித்துள்ளார்.

தனி அறை எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்த ரம்யா

ரம்யா - வசந்த ராவ் இடையேயான தகாத உறவு தான் அறிந்த போலீசார், விசாரணை நடத்தி வந்த நிலையில் நாகராஜி இறந்த பிறகு ​​ரம்யாவும் வசந்தராவும் வேறு அறை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்ததால் ரம்யா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர்.

தொலைபேசி அழைப்பு தரவுகளின் அடிப்படையில் விசாரித்த போது உண்மை தெரிய வந்தது. இதனையடுத்து ரம்யா, வசந்த ராவ், ராம்பாபு மற்றும் பாண்டு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், நாகராஜிவின் உடல் ஒரு வெறிச்சோடிய பகுதியில் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Embed widget