மேலும் அறிய

மழைக்காலங்களில் அமைச்சர்கள் படகை தேடுவதுதான் திராவிட மாடல் அரசா ? - அன்புமணி ராமதாஸ்

மழை வரும் சமயத்தில் மழைநீர் வெளியேற தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதை விட்டுவிட்டு, அமைச்சர்களும் அதிகாரிகளுடன் படகை தேடுகின்றனர். இதுதான் திராவிட மாடல் அரசா - அன்புமணி

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், அரசு இதில் மேலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மழை வரும் சமயத்தில் மழைநீர் வெளியேற தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதை விட்டுவிட்டு அமைச்சர்களும் அதிகாரிகளுடன் படகை தேடுகின்றனர் இதுதான் திராவிட மாடலா ? அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

OBC தொழிலாளர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க சட்ட திருத்தம் செய்ய வேண்டும், OBC பிரிவினருக்கு சிறப்பு பணி நியமன தேர்வை நடத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ரயில்வே ஊழியர் (AIOBC) சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ்,

தமிழ்நாட்டில் உள்ள கடைநிலை ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என இந்த போராட்டம் நடைபெற்றது. OBC- மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என தொடர்ந்து நாங்கள் போராடி வருகிறோம்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆழமான கோரிக்கை இந்தியா முழுவதும் இருந்து வருகிறது. அதில் தமிழ்நாட்டில் அதிகமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டும் என்கிற வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருக்கிறது. அதற்கு ஒரே தீர்வு சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து உச்சநீதி மன்றத்தில் நிருபிக்க வேண்டும். இல்லையெனில் அதை ரத்து செய்ய வேண்டிய ஒரு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.

இதற்கு முன்னால் இருந்த முதலமைச்சர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்று சொல்லவில்லை. தற்போதையை முதல்வர் தான் இப்படி கூறுகிறார். கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ICU அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் இது போன்ற நிலைதான். சட்டம் ஒழுங்கு என்று ஒன்று தமிழ்நாட்டில் இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 6 ஆயிரம் கொலை,55 ஆயிரம் கொள்ளை சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து இணையான காவல்துறை என்பதெல்லாம் போய்விட்டது. வன்னியர் சங்க தலைவர் தலையை எடுப்பேன் என ஒரு நபர் மேடையில் பேசுகிறார். ஆனால் அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் துறை கோழையாக உள்ளது, ஏன் காவல்துறை பயப்படுகிறது? என கேள்வி எழுப்பினார்.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அரசு இதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும், அரசு மெத்தனமாக செயல்படுகிறது. ஆட்சிக்கு வந்தால் 5 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்களை நாங்கள் நியமனம் செய்வோம் என கூறினார் முதலமைச்சர், ஆனால் செய்தது வெறும் 68 ஆயிரம் அதிலும் 32 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள். அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது. தெரு தெருவாக தமிழ்நாட்டில் கஞ்சா விற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கிடைக்கும் அனைத்து போதை பொருட்களும் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. தமிழக முதலமைச்சர் இதை கண்டுக்கொள்வதில்லை. தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க வேண்டும்.

திமுக கொடுத்த 550 வாக்குறுதிகளில் 45 வாக்குறுதிகள் தான் நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அனைத்து துறைகளிலும் பற்றாக்குறை உள்ளது. இந்தியாவில் 8 மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் கொடுப்போம் என்று அறிவித்து கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஏன் கொடுக்கமுடியவில்லை?

 மழை வரும் சமயத்தில் மழைநீர் வெளியேற தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதை விட்டுவிட்டு, அமைச்சர்களும் அதிகாரிகளுடன் படகை தேடுகின்றனர். இதுதான் திராவிட மாடல் அரசா ?ஏரிகள், ஆறுகள் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யபடுகிறது, ஆனால் தூர் வாரும் பணிகள் நடைபெறுவதில்லை கொள்ளை தான் அடிக்கின்றனர். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெறும். அதில் பாமக இடம்பெறும் என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தால் பெற்று தந்திருப்பேன்! ஓபிஎஸ் வெளியேற்றம்: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தால் பெற்று தந்திருப்பேன்! ஓபிஎஸ் வெளியேற்றம்: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
ED Vs Anil Ambani: சிக்கலில் அனில் அம்பானி; ரூ.3,000 கோடி வங்கிக் கடன் மோசடி - லுக் அவுட் நோட்டீஸ் வழங்கிய ED
சிக்கலில் அனில் அம்பானி; ரூ.3,000 கோடி வங்கிக் கடன் மோசடி - லுக் அவுட் நோட்டீஸ் வழங்கிய ED
ஹை ஜாலி.. ஆகஸ்ட் மாதத்தில் 8 விடுமுறை நாட்களா? மாணவர்கள், அரசு ஊழியர்கள் கொண்டாட்ட
ஹை ஜாலி.. ஆகஸ்ட் மாதத்தில் 8 விடுமுறை நாட்களா? மாணவர்கள், அரசு ஊழியர்கள் கொண்டாட்ட
வேலை தேடுவோருக்கு நற்செய்தி! 2 நாள் பயிற்சிப் பட்டறை: திறன்களை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு!
வேலை தேடுவோருக்கு நற்செய்தி! 2 நாள் பயிற்சிப் பட்டறை: திறன்களை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OFFER கொடுத்த அமித்ஷா! தூக்கியெறிந்த OPS? தமிழ்நாடு வரும் மோடி
ஊரை விட்டு ஒதுக்கிய சாதியவாதி கதறும் பெண் நடவடிக்கை எடுக்குமா அரசு? | DMK
4 மணி நேர மீட்டிங்! ஸ்டாலின் வீட்டில் OPS! பின்னணி என்ன?
OPERATION தென் தமிழகம்! OPS-க்கு பக்கா ஸ்கெட்ச் ராஜாவை தட்டித்தூக்கிய EPS | Ramanad | Ramanathapuram | ADMK | Nagendra Sethupathy |y
Thanjavur DMK Issue | ’’நான் தான் அடுத்த MLA’’தஞ்சை மேயர் அட்ராசிட்டி?திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தால் பெற்று தந்திருப்பேன்! ஓபிஎஸ் வெளியேற்றம்: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தால் பெற்று தந்திருப்பேன்! ஓபிஎஸ் வெளியேற்றம்: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
ED Vs Anil Ambani: சிக்கலில் அனில் அம்பானி; ரூ.3,000 கோடி வங்கிக் கடன் மோசடி - லுக் அவுட் நோட்டீஸ் வழங்கிய ED
சிக்கலில் அனில் அம்பானி; ரூ.3,000 கோடி வங்கிக் கடன் மோசடி - லுக் அவுட் நோட்டீஸ் வழங்கிய ED
ஹை ஜாலி.. ஆகஸ்ட் மாதத்தில் 8 விடுமுறை நாட்களா? மாணவர்கள், அரசு ஊழியர்கள் கொண்டாட்ட
ஹை ஜாலி.. ஆகஸ்ட் மாதத்தில் 8 விடுமுறை நாட்களா? மாணவர்கள், அரசு ஊழியர்கள் கொண்டாட்ட
வேலை தேடுவோருக்கு நற்செய்தி! 2 நாள் பயிற்சிப் பட்டறை: திறன்களை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு!
வேலை தேடுவோருக்கு நற்செய்தி! 2 நாள் பயிற்சிப் பட்டறை: திறன்களை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு!
IBPS Clerk 2025: 10 ஆயிரம்+ இடங்கள்; வங்கிகளில் பணி- விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, சம்பளம்
IBPS Clerk 2025: 10 ஆயிரம்+ இடங்கள்; வங்கிகளில் பணி- விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, சம்பளம்
தமிழக அரசு திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Vice President Election: செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Friendship Day 2025 Wishes: நண்பா.. நாமதான் நட்புக்கு புது வெண்பா.. நண்பர்களுக்கு இந்த வாழ்த்தை ஷேர் பண்ணுங்க!
Friendship Day 2025 Wishes: நண்பா.. நாமதான் நட்புக்கு புது வெண்பா.. நண்பர்களுக்கு இந்த வாழ்த்தை ஷேர் பண்ணுங்க!
Embed widget