மேலும் அறிய

ABP Nadu Impact: பார்வை குறைபாடுடன் தவித்த இளைஞருக்கு சென்னை நண்பர்கள் குழு உதவி

நண்பர்கள் குழுவின் உதவி மட்டுமல்லாது விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ராஜேஷை  நேரில் சந்தித்த வி.மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர், அரசு மூலம் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் விரைவில் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் குமளம் அடுத்த வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (33) . இவர் 2004 ஆம் ஆண்டு தங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10  ஆம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு மலேரியா மற்றும் டைபாய்டு காய்ச்சல் ஒரு சேர வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . பின்னர் காய்ச்சலின் தீவிரத்தால் மெல்ல மெல்ல கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டு தற்பொழுது , 80 சதவீத பார்வையை இழந்து வெறும் 20  சதவீத கண் பார்வையுடன் இருக்கிறார் .

ABP Nadu Impact: பார்வை குறைபாடுடன் தவித்த இளைஞருக்கு சென்னை நண்பர்கள் குழு உதவி

ராஜேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த வேளையில், அவரது தாய் விசாலாட்சி ஒரு விபத்தில் சிக்கி தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டது . மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி , இதுவரை விவசாய கூலி வேலை சென்று கொண்டு இருந்த விசாலாட்சி படுத்த படுக்கையாக வீட்டில முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று .

ஒட்டுமொத்த குடும்பமும் வறுமையில் சிக்கி தவித்ததால், ராஜேஷின் தந்தை சின்னதுரை குடும்பத்தை கைவிட்டுவிட்டு , ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்று விட்டார் .ராஜேஷின் இரு சகோதரர்களும் திருமணம் செய்து கொண்டு தனி தனியாக வசித்து வரும் சூழ்நிலையில் . பிழைக்க போதிய வருமானம் இன்றி , உண்ண ஒரு வேளை உணவு கூட இன்றி வறுமையில் சிக்கி தவித்தனர் ராஜேஷ் மற்றும் அவரது தாய் விசாலாட்சி .

ABP Nadu Impact: பார்வை குறைபாடுடன் தவித்த இளைஞருக்கு சென்னை நண்பர்கள் குழு உதவி

நிரந்தர வருமானம் ஏதும் இல்லம் , அரசு மாற்று திறனாளிகள் துறையில் இருந்து வரும் 1000  ரூபாயை நம்பியே பிழைப்பு நடத்தி வருவதாகவும் . மேலும் இந்த பணம் தனக்கும் தனது தாய்க்கும் மருத்துவ செலவுக்கே பற்றாமல் இருப்பதால் , மாதத்தின் பெரும்பாலான நாட்களை  பட்டினியுடனே கழிப்பதாகவும் கூறினார் ராஜேஷ் .

தங்களது வீடு முற்றிலும் சிதலம் அடைந்து உள்ளதால் மழை காலங்களில் இருக்க இடம் கூட இன்றி கோவிலில்தங்கிவருவதாகவும் தெரிவித்தார் .  இதனை அறிந்து ABP நாடு செய்தி குழுமம் கடந்த புதன் கிழமை அன்று , ராஜேஷை தொடர்புகொண்டு அவரைப்பற்றிய செய்தியை "பார்வையில்லை... வீடில்லை... வேலையில்லை... தாயுடன் கோவிலில் தஞ்சமடைந்த மகன்!" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது .

அதனை படித்த சென்னையை சேர்ந்த கைன்ட்னெஸ் கிட்டி (Kindness Kitty ) என்ற  நண்பர்கள்  குழுவினர் , ABP  நாடு மூலம் ராஜேஷின் தொடர்பு எண் பெற்று கண்பார்வை குறைபாடு உள்ள ராஜேஷை நேரடியாக தொடர்புகொண்டு அவருக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர் .

ABP Nadu Impact: பார்வை குறைபாடுடன் தவித்த இளைஞருக்கு சென்னை நண்பர்கள் குழு உதவி

இது தொடர்பாக கைன்ட்னெஸ் கிட்டி நண்பர்கள் குழுவை சேர்ந்த ஜெயா மகேஷ் நம்மிடம் பேசியபொழுது, ‛‛1993  - 1997 ஆம் வருடம் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த மாணவர்களை கொண்டு இந்த கைன்ட்னெஸ் கிட்டி என்கின்ற நண்பர்கள் குழுவை , தமிழ் நாட்டில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய 2015  ஆம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக ஆரம்பித்தோம். இப்பொழுது நண்பர்கள் , தன்னார்வலர்கள் என்று எங்களது நண்பர்கள் குழுவின் வட்டம் பெரிதாகி உள்ளது . எங்கள் குழு மூலம் ஆதரவற்றோருக்கு எங்களால் முடிந்த உதவி செய்து வருகிறோம் .

ABP Nadu Impact: பார்வை குறைபாடுடன் தவித்த இளைஞருக்கு சென்னை நண்பர்கள் குழு உதவி

ABP நாடு செய்தி குழுமத்தின் மூலம் ராஜேஷை அடையாளம் கண்ட நாங்கள், அவருக்கு முதற்கட்ட உதவியாக 2000 ரூபாய் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் , 1000  ரூபாய் பணமும்  அவருடைய ஊரை சார்ந்த ஞானப்பிரகாஷ் என்பவர் மூலம் ராஜேஷுக்கு கொண்டுபோய் சேர்த்துள்ளோம் . மேலும் அவருக்கு கண் சிகிச்சை , மற்றும் அரசு வேலைக்கு மனு செய்தல் உள்ளிட்ட வேலைகளை , ஊரடங்கு முடித்தவுடன் செய்யலாம் என்று திட்டம் வகுத்துள்ளோம் . என்று தெரிவித்தார் .

மேலும்  இன்று விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ராஜேஷை  நேரில் சந்தித்த வி.மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர்  , அரசு மூலம் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் விரைவில் செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நம்மை தொடர்பு கொண்ட ராஜேஷ் , ABP நாடு செய்தி குழுமத்திற்கும்,  கைன்ட்னெஸ் கிட்டி அமைப்புக்கும்  தனது நன்றிகளை  தெரிவித்து கொண்டார் .

தலைப்பு செய்திகள்

இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Embed widget