மேலும் அறிய

ABP Nadu Impact: பார்வை குறைபாடுடன் தவித்த இளைஞருக்கு சென்னை நண்பர்கள் குழு உதவி

நண்பர்கள் குழுவின் உதவி மட்டுமல்லாது விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ராஜேஷை  நேரில் சந்தித்த வி.மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர், அரசு மூலம் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் விரைவில் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் குமளம் அடுத்த வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (33) . இவர் 2004 ஆம் ஆண்டு தங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10  ஆம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு மலேரியா மற்றும் டைபாய்டு காய்ச்சல் ஒரு சேர வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . பின்னர் காய்ச்சலின் தீவிரத்தால் மெல்ல மெல்ல கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டு தற்பொழுது , 80 சதவீத பார்வையை இழந்து வெறும் 20  சதவீத கண் பார்வையுடன் இருக்கிறார் .

ABP Nadu Impact: பார்வை குறைபாடுடன் தவித்த இளைஞருக்கு சென்னை நண்பர்கள் குழு உதவி

ராஜேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த வேளையில், அவரது தாய் விசாலாட்சி ஒரு விபத்தில் சிக்கி தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டது . மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி , இதுவரை விவசாய கூலி வேலை சென்று கொண்டு இருந்த விசாலாட்சி படுத்த படுக்கையாக வீட்டில முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று .

ஒட்டுமொத்த குடும்பமும் வறுமையில் சிக்கி தவித்ததால், ராஜேஷின் தந்தை சின்னதுரை குடும்பத்தை கைவிட்டுவிட்டு , ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்று விட்டார் .ராஜேஷின் இரு சகோதரர்களும் திருமணம் செய்து கொண்டு தனி தனியாக வசித்து வரும் சூழ்நிலையில் . பிழைக்க போதிய வருமானம் இன்றி , உண்ண ஒரு வேளை உணவு கூட இன்றி வறுமையில் சிக்கி தவித்தனர் ராஜேஷ் மற்றும் அவரது தாய் விசாலாட்சி .

ABP Nadu Impact: பார்வை குறைபாடுடன் தவித்த இளைஞருக்கு சென்னை நண்பர்கள் குழு உதவி

நிரந்தர வருமானம் ஏதும் இல்லம் , அரசு மாற்று திறனாளிகள் துறையில் இருந்து வரும் 1000  ரூபாயை நம்பியே பிழைப்பு நடத்தி வருவதாகவும் . மேலும் இந்த பணம் தனக்கும் தனது தாய்க்கும் மருத்துவ செலவுக்கே பற்றாமல் இருப்பதால் , மாதத்தின் பெரும்பாலான நாட்களை  பட்டினியுடனே கழிப்பதாகவும் கூறினார் ராஜேஷ் .

தங்களது வீடு முற்றிலும் சிதலம் அடைந்து உள்ளதால் மழை காலங்களில் இருக்க இடம் கூட இன்றி கோவிலில்தங்கிவருவதாகவும் தெரிவித்தார் .  இதனை அறிந்து ABP நாடு செய்தி குழுமம் கடந்த புதன் கிழமை அன்று , ராஜேஷை தொடர்புகொண்டு அவரைப்பற்றிய செய்தியை "பார்வையில்லை... வீடில்லை... வேலையில்லை... தாயுடன் கோவிலில் தஞ்சமடைந்த மகன்!" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது .

அதனை படித்த சென்னையை சேர்ந்த கைன்ட்னெஸ் கிட்டி (Kindness Kitty ) என்ற  நண்பர்கள்  குழுவினர் , ABP  நாடு மூலம் ராஜேஷின் தொடர்பு எண் பெற்று கண்பார்வை குறைபாடு உள்ள ராஜேஷை நேரடியாக தொடர்புகொண்டு அவருக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர் .

ABP Nadu Impact: பார்வை குறைபாடுடன் தவித்த இளைஞருக்கு சென்னை நண்பர்கள் குழு உதவி

இது தொடர்பாக கைன்ட்னெஸ் கிட்டி நண்பர்கள் குழுவை சேர்ந்த ஜெயா மகேஷ் நம்மிடம் பேசியபொழுது, ‛‛1993  - 1997 ஆம் வருடம் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த மாணவர்களை கொண்டு இந்த கைன்ட்னெஸ் கிட்டி என்கின்ற நண்பர்கள் குழுவை , தமிழ் நாட்டில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய 2015  ஆம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக ஆரம்பித்தோம். இப்பொழுது நண்பர்கள் , தன்னார்வலர்கள் என்று எங்களது நண்பர்கள் குழுவின் வட்டம் பெரிதாகி உள்ளது . எங்கள் குழு மூலம் ஆதரவற்றோருக்கு எங்களால் முடிந்த உதவி செய்து வருகிறோம் .

ABP Nadu Impact: பார்வை குறைபாடுடன் தவித்த இளைஞருக்கு சென்னை நண்பர்கள் குழு உதவி

ABP நாடு செய்தி குழுமத்தின் மூலம் ராஜேஷை அடையாளம் கண்ட நாங்கள், அவருக்கு முதற்கட்ட உதவியாக 2000 ரூபாய் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் , 1000  ரூபாய் பணமும்  அவருடைய ஊரை சார்ந்த ஞானப்பிரகாஷ் என்பவர் மூலம் ராஜேஷுக்கு கொண்டுபோய் சேர்த்துள்ளோம் . மேலும் அவருக்கு கண் சிகிச்சை , மற்றும் அரசு வேலைக்கு மனு செய்தல் உள்ளிட்ட வேலைகளை , ஊரடங்கு முடித்தவுடன் செய்யலாம் என்று திட்டம் வகுத்துள்ளோம் . என்று தெரிவித்தார் .

மேலும்  இன்று விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ராஜேஷை  நேரில் சந்தித்த வி.மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர்  , அரசு மூலம் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் விரைவில் செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நம்மை தொடர்பு கொண்ட ராஜேஷ் , ABP நாடு செய்தி குழுமத்திற்கும்,  கைன்ட்னெஸ் கிட்டி அமைப்புக்கும்  தனது நன்றிகளை  தெரிவித்து கொண்டார் .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget