மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் 35 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயறு சாகுபடி பாதிப்பு

தை மாதம் அறுவடை முடித்த பின்னர் தங்களது வயல்களில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பயறு உளுந்து தெளித்தனர்

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சினையின் காரணமாக மூன்று போகம் சாகுபடி என்பது ஒருபோக சாகுபடி ஆக மாறியது. இந்த நேரத்தில் விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீரில் செய்யக்கூடிய சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என தமிழ்நாடு வேளாண் துறை அறிவுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் குறைந்த அளவு தண்ணீரில் சாகுபடி செய்யக்கூடிய பருத்தி உளுந்து பயிர் உள்ளிட்ட சாகுபடி பணிகளில் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் 35 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயறு சாகுபடி பாதிப்பு
 
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பயறு உளுந்து வகை சாகுபடி சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக உளுந்து பயறு சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு பின்னர், தங்களது வயல்களில் விவசாயிகள் பயறு உளுந்து சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், தை மாதம் அறுவடை முடித்த பின்னர் தங்களது வயல்களில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பயறு உளுந்து தெளித்தனர்.  அப்போது மழை பெய்த நிலையில் தெளித்த விதைகள் பெருமளவு சேதமடைந்தன. அந்த மழையில் தப்பிப்பிழைத்த பயறு உளுந்து பயிர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பெய்த மழை காரணமாக பெரும் பாதிப்பு அடைந்து உள்ளன. 

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் 35 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயறு சாகுபடி பாதிப்பு
 
குறிப்பாக திருவாரூர் அருகே கானூர், கல்லுகுடி, பாலியாபுரம் குடவாசல் நன்னிலம் அரசவனங்காடு மன்னார்குடி திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயறு உளுந்து வகைப் பயிர்கள் சேதமடைந்துள்ளன குறிப்பாக இலைகள் பழுக்க தொடங்கி உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நெல் சாகுபடிக்கு பின்னர் உளுந்து பயறு வகைகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு உதவிகரமாக உள்ளது. நிகழாண்டில் சாகுபடி தொடங்கும் போதே மழை பெய்ததால் தெளித்த விதைகள் பரவலாக முளைக்காத நிலை இருந்தது அதில் தப்பித்து பிழைத்த உளுந்து பயறு வகை செடிகள் தற்போது பெய்து வரும் மழையில் சிக்கி சேதமடைந்து வருகின்றன. குறிப்பாக இழைகள் பழுக்க தொடங்கி உள்ளது இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தார். அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கு எடுத்து உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

வெட்கம், சொரணை இருந்தால் விஜய்க்கு இனி ஓட்டு போடாதீங்க.. திமுக MP ஆ.ராசா ஆவேசம்!
வெட்கம், சொரணை இருந்தால் விஜய்க்கு இனி ஓட்டு போடாதீங்க.. திமுக MP ஆ.ராசா ஆவேசம்!
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Nainar Nagendran: வாண்டட் ஆக வந்து சிக்கிய நயினார்.. அரசியல் பழி தீர்க்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள்!
Nainar Nagendran: வாண்டட் ஆக வந்து சிக்கிய நயினார்.. அரசியல் பழி தீர்க்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள்!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget