மேலும் அறிய

பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் - ஆயுர்வேதம் சொல்வது என்ன ?

நம்மில் பலருக்கும் சாப்பிட்ட பிறகு வாழைபழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.இது மிகவும் தவறான உணவு பழக்க வழக்கம்.

நம்மில் பலருக்கும் சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.இது மிகவும் தவறான உணவு பழக்க வழக்கம்.

இன்றைய நவீன உணவு  நிபுணர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைப்பது என்னவென்றால், எந்த பழத்தையும் சாப்பிட்ட உடனே சாப்பிடக் கூடாது. மேலும் எந்த நேரத்தில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நன்மை என பரிந்துரை செய்கின்றனர்.

காலை உணவாக வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்து கொள்வது சரியான நேரம். இன்றைய உணவு நிபுணர்கள் அனைவரும் இதையே தான் பரிந்துரை செய்கின்றனர். மேலும் ஆயுர்வேத முறை மருத்துவர்களும் இதையே தான் பரிந்துரை செய்கின்றனர். காலை எழுந்ததும்,  காபி, டீ போன்றவற்றை குடிக்காமல், நேரடியாக காலை உணவு எடுத்து கொள்பவர்களுக்கு பழ உணவு எடுத்து கொள்ளலாம். ஆயுர்வேத முறைப்படி உணவுக்கு பிறகு பழங்களை எடுத்து கொள்வதால்,  செரிமான பிரச்சனையை தரும். உணவு முழுமையாக செரிமானம் ஆகாமல், ஊட்டச்சத்துகள் முழுமையாக உணவில் இருந்து உடலுக்கு கிடைக்காது. அதனால் உணவு சாப்பிட பிறகு, ஒரு மணி நேரத்திற்கு எந்த பழங்களும் எடுத்து கொள்ளக் கூடாது.

பொதுவாக பழங்கள் அனைத்தும் வைட்டமின் மற்றும் தாது உப்புகள் நிறைந்து இருக்கிறது. இதில் க்ளுகோஸ் நிறைந்து இருக்கிறது. கலோரிகள் நிறைந்து இருக்கிறது. அன்றாடம் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் பழங்களில் இருந்து கிடைக்கும். ஒரு நாளைக்கு ஏதேனும் இரண்டு பழங்கள் உணவில் சேர்த்து கொள்வது, உடல் ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.

நம்மில் நிறைய பேருக்கு தயிர் சாதத்திற்கு மாம்பழம் சேர்த்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது மிகவும் தவறான உணவுப் பழக்கம் ஆகும்.  இது போன்ற பழங்கள் சாப்பிட்ட உடன், டீ காபி குடிக்கும் பழக்கம் சேர்ந்து இருக்கும்.


பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் - ஆயுர்வேதம் சொல்வது என்ன ?

பழங்கள் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வேறு ஏதேனும் உணவுகளை எடுத்து கொள்ளலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பழங்கள் எடுத்து கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் பழங்கள் ஏதும் சாப்பிட கூடாது என சொல்வார்கள். ஆனால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் நீங்கள் பழங்களை எடுத்து கொள்ளலாம். குறிப்பாக மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் இவைகளை தவிர்க்க வேண்டும். மற்ற அணைத்து  பழங்களையும் எடுத்து கொள்ளலாம்.

இரத்த சோகை நோய் இருப்பவர்களுக்கு ஆரஞ்சு மற்றும் பேரீச்சம் பழம் நன்றாக இருக்கும். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து இருக்கும் பேரீச்சம் பழத்தில், இரும்பு சத்து அதிகமாக இருக்கும். இரும்பு சத்து குறைபாடு இருப்பவர்களும் வைட்டமின் சி சத்தும் சேர்த்து எடுத்து கொண்டால் தான் இரும்பு சத்து உடலுக்கு கிடைக்கும். இவை இரண்டு சத்துகளும் சரிசமமாக எடுத்து கொள்வது அவசியம்.

ஒவ்வொரு பழத்திற்கு ஒவ்வொரு குணங்கள் இருக்கும். முழுமையாக பழத்தில் இருந்து ஊட்டச்சத்துகள் கிடைக்க வெறும் வயிற்றில் பழங்களை எடுத்து கொள்ள வேண்டும்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget