மேலும் அறிய

மறுமணம்.... மாறுகிறது மனம்...! இது ஆறுதலின் தொடக்கம்!

எட்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் வீட்டில் உள்ளவர்களுக்கு மூக்கு வியர்த்திருக்கிறது போல. இத்தனை வருடங்களாக இப்படி ஒரு கேள்வியை எதிர்கொண்டதே இல்லை.

மறுமணம் குறித்து ஊடகவியலாளர் பொன் விமலா தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார். இதோ அந்த பதிவு.... 

உறவில் பெண் பார்க்கும் நிகழ்வு நடந்தால் 5 பேர் அல்லது 7 பேர் என்று கணக்கு வைத்துக் கொண்டு போவார்கள். நிச்சயதார்த்தம், திருமணம், காதணி உள்ளிட்ட நிகழ்வுகளுக்குக் கூட போனால் போகட்டும் என்று அவர்களாக வந்து என்னை அழைப்பது வழக்கம். ஆனால் இந்த பெண் பார்க்கும் படலம், மஞ்சள் நீராட்டு விழா இதற்கெல்லாம் என்னிடம் சொல்வதைக் கூட அபசகுணம் என்று நினைத்துவிடுவார்கள்.
ஏனிந்த வம்பென்று நானாகவே மூக்கை நுழைக்காமல் தவிர்த்துவிடுவேன். ஒருமுறை சொந்தத் தம்பிக்கு பெண் பார்க்கும் படலம் என்பதால் 5 ஆம் நபராய் சாங்கியச் சம்பிரதாயங்களுக்கு இடம் கொடுக்காமல் முன்னால் போய் நின்றேன். போன இடத்தில் நான் திருமணமான பெண் என்றும் எனக்கொரு மகள் இருப்பதாகவும் யாரும் நம்பாமல் போனதால் அடுத்த முறை வரும்போது கொஞ்சம் முதிர்ந்த தோற்றத்தில் வருமாறு அறிவுறுத்தினார்கள். 'இனி இந்த இளமையைக் கழட்டிக் கொடியில்  காயப்போடணும் போல' என்று நினைத்துக் கொண்டேன்.

எட்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் வீட்டில் உள்ளவர்களுக்கு மூக்கு வியர்த்திருக்கிறது போல. இத்தனை வருடங்களாக இப்படி ஒரு கேள்வியை எதிர்கொண்டதே இல்லை. முதன்முறையாக இப்போதாவது கேட்க வேண்டுமென தோன்றியதே என்று கொஞ்சமாக சந்தோஷப்பட்டுக் கொண்டேன். என்ன திடீர்னு இப்ப இந்த கேள்வி என்றேன். 


மறுமணம்.... மாறுகிறது மனம்...! இது ஆறுதலின் தொடக்கம்!

இல்ல ... பாக்க இன்னும் கூட சின்ன பொண்ணு மாதிரி தான் இருக்காங்க. ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாமேன்னு ஆளாளுக்குக் கேட்கிறாங்களாம். இப்ப ஏன் இந்த ஞானோதயம் என்றேன். முன்பெல்லாம் ஊரில் இதெல்லாம் தப்பாக இருந்ததாம். இப்போது சிலர் இதையெல்லாம் உடைத்து மறுமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்களாம். அதான் இப்ப சொல்லணும்னு தோணுச்சு என்றார்கள்.

சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அடுத்தவர் சூடு போட்டுக் கொண்டால் தானும் சூடு போட்டுக் கொள்ளலாம் என்கிற மனநிலையால் தான் இந்த மாற்றமே தவிர ஊருக்காக, உறவுகளுக்காக பயந்த யாரும் என்னைப் பற்றியும் என் மகள் பற்றியும் இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. குறைந்தது என்னிடம் மறுமணம் குறித்த பேச்சுக்குக் கூட அழைத்ததில்லை. 

உள்மனம் எப்போதும் நினைப்பது போல் மகள் இருக்கிறாள் போதுமென்று கடந்துவந்துவிட்டேன். ஒரு பெண் வாழ வேண்டிய வயதில் தன் இணையில்லாமல் தனித்து வாழ்கிற சூழல் நேர்ந்தால் அவளை அவள் முடிவில் விடுங்கள். அடுத்த வாழ்வு குறித்தோ அல்லது தனித்திருப்பது குறித்தோ அவளே முடிவு செய்யட்டும். இங்கு இவ்வளவு பேசுகிற நான் வீட்டில் அப்பா ,அம்மா குடும்பமென்று பெட்டிப்பாம்பாய் அடங்கிப் போகிற வகையறா தான். 

எனக்கு தெரிந்த பெண்ணொருத்தி திருமணமான ஒரே ஆண்டில் விபத்தொன்றில் தன் கணவனை இழந்தாள். 6 வருடங்களாய் தனித்திருக்கிறாள். மறுமணம் குறித்துப் பேசினால் காதல் திருமணம் மறக்க முடியவில்லை என்கிறாள். குழந்தை எதுவுமில்லை என்று மறுமணத்துக்குக் கட்டாயப் படுத்துவதாகச் சொன்னாள். பெண்ணுக்கு மறுமணம் என்பதே தவறென்ற சமூகநிலை மெதுமெதுவாக மாறிக் கொண்டிருப்பது ஒரளவுக்கு மகிழ்ச்சி தான். மாற்றம் என்பது நம் வீட்டிலிருந்து தொடங்கட்டும். சமூகம் ஒரு நாள் அதுவாகவே மாறும்.

தலைப்பு செய்திகள்

Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
2026 Fathers Day: 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' - சர்வதேச தந்தையர் தினம்.. உங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்லுங்க!
2026 Fathers Day: 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' - சர்வதேச தந்தையர் தினம்.. உங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்லுங்க!
Children Height Growth: உயரம் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.. மருத்துவர்கள் சொல்லும் தீர்வு என்ன?
Children Height Growth: உயரம் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.. மருத்துவர்கள் சொல்லும் தீர்வு என்ன?
இலவச அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!
இலவச அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
Embed widget