மேலும் அறிய

கொரோனா காலகட்டத்தில் அவசிய தேவையாகும் மனநல ஆலோசனைகள்!

கொரோனா காலகட்டத்தில் உடல்நலம் போலவே மிக மிக முக்கியமானது மனநலம் சார்ந்த ஆலோசனைகளும் சிகிச்சைகளும் என்பதை கேரள அரசு நன்கு உணர்ந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மனநலம் சார்ந்த ஆலோசனைகளும், சிகிச்சைகளும் எந்த அளவுக்கு கடைபிடிக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்த கொரோனாகாலகட்டத்தில் அரசு தீவிரமாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் தினம்தோறும் சராசரியாக 25ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிக்கிறது. ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என அரசின் அடுத்தடுத்த நடவடிக்கையால் நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினமும் மாலை கொரோனா தொடர்பான விவரங்களை அரசு வெளியிடுகிறது. அன்றைய தினத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு அளவில் எத்தனை? மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் என்ன? இறப்பு எண்ணிக்கை எவ்வளவு? குணமடைந்து சென்றவர்கள் எத்தனை பேர்? போன்ற விவரங்கள் வழங்கப்படுகின்றன. நோய்க்குறித்தும் சிகிச்சை குறித்தும் தமிழ்நாடு அரசு இந்த தகவலை வழங்கினாலும் மிக முக்கியமான ஒரு கூடுதலாக வழங்கி வருகிறது கேரள அரசு. அது மனநலம் சார்ந்த புள்ளி விவரங்கள். 


கொரோனா காலகட்டத்தில் அவசிய தேவையாகும் மனநல ஆலோசனைகள்!

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் எத்தனை பேருக்கு மனநலம் சார்ந்த ஆலோசனை வழங்கப்பட்டது என்றும், அதேபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மனநிலை, பள்ளி குழந்தைகளின் மனநிலை, முன்களப் பணியாளர்களின் மனநிலை, அரசின் இலவச தொலைபேசிக்கு மனநலம் சார்ந்து ஆலோசனைக்கு அழைப்பவர்கள் என மனநிலை சார்ந்த ஆலோசனை வழங்கப்படுவது குறித்த புள்ளிவிவரம் தினம் தோறும் தகவல்களாக வழங்கப்படுகின்றன.

கொரோனா காலகட்டத்தில் உடல்நலம் போலவே மிக மிக முக்கியமானது மனநலம் சார்ந்த ஆலோசனைகளும் சிகிச்சைகளும் என்பதை கேரள அரசு நன்கு உணர்ந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மனநலம் சார்ந்த ஆலோசனைகளும், சிகிச்சைகளும் எந்த அளவுக்கு கடைபிடிக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. முற்றிலும் இல்லாமல் இல்லை. புதுக்கோட்டையில் சில தினங்களுக்கு முன்பு 54ஆயிரம் பேருக்கு மனநலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்ட அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம், விடுமுறை இன்றி 54000 பேருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது எங்கள் குழுவின் சிறந்த பணி என்று குறிப்பிட்டுள்ளார். 


கொரோனா காலகட்டத்தில் அவசிய தேவையாகும் மனநல ஆலோசனைகள்!

தமிழகத்தின் சில இடங்களிலும், சென்னை போன்ற பெருநகரங்களில் ஆங்காங்கே மனநல  ஆலோசனைகளை தேடிப்பிடிக்கலாம் என்றாலும் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆலோசனைகள் கிடைக்கிறதா என்பதை அரசு தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா குறித்தான அச்சம், கொரோனா அறிகுறி இருந்தாலும் அச்சத்தால் சோதனை செய்துகொள்ளாமல் இருப்பது,  வீடுகளுக்குள் முடங்குவது, வீட்டை விட்டு பிரிந்து இருப்பதால் ஏற்படும் மன உளைச்சல், பொருளாதார சிக்கல்கள், ஊரடங்கால் ஏற்படும்  வருமானம் இழப்பு, உறவினர்கள், நண்பர்களின் உயிரிழப்பு என மனநலம் சார்ந்த பல பிரச்னைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


உலக உணவு பாதுகாப்பு நாள்: உங்கள் உணவை பாதுகாக்க சில ‛டிப்ஸ்’


கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது தனிமையில் இருந்த ஒருவர் தன்னுடைய மனநிலை குறித்து பேசினார். அதில், நான் இப்போது கொரோனாவில் இருந்து மீண்டு விட்டேன். ஆனால் கொரோனா காலக்கட்டம் என்னை மனதளவில் பயமுறுத்தியது. வழக்கமான நோய் என்றாலும் குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்கள் என ஒரு கூட்டம் நம்மை சுற்றி இருக்கும். ஆனால் கொரோனா என்னை தனிமையில் தள்ளியதாக உணர வைத்தது. செல்போன், சோஷியல் மீடியா என என்னை தனிமையில்  இருந்து நானே விலகி வைத்தாலும் ஒரு வித எதிர்மறையான எண்ணம் என்னை சுற்றி  இருப்பதை உணர முடிந்தது. அதை அனைவராலும் எளிதாக கடந்துவரமுடியுமா என்பது கேள்விகுறிதான். உடல்நல சிகிச்சை போலவே மனநல ஆலோசனைகளும் கொரோனா காலக்கட்டத்தில் மிக முக்கியம் என்றார்.


கொரோனா காலகட்டத்தில் அவசிய தேவையாகும் மனநல ஆலோசனைகள்!

 மருத்துவ மனைகளில் மனநல ஆலோசனை மையங்கள், இலவச தொலைபேசி மூலம் மனநல ஆலோசனைகள் எனமனநல ஆலோசனை விவரங்களையும் தமிழக அரசு தனியாக கையாண்டு புள்ளிவிவரமாக வெளியிட வேண்டும். கொரோனாவுக்கு மக்களின் உடல்நலம்  சார்ந்த சிகிச்சையில்  கவனம் செலுத்தும் அரசு, அதே முக்கியத்துவைத்தை மனநலம்சார்ந்த பிரச்னைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


இமாச்சலில் பலி எடுக்கும் கொரோனா சர்க்கரை.. .. கவனம் மக்கா!


 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
Madurai - சிலிண்டர் தட்டுப்பாடு டீ, காபி கடைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் - டீ, காபி வர்த்தக சங்கம் கவலை !
Madurai - சிலிண்டர் தட்டுப்பாடு டீ, காபி கடைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் - டீ, காபி வர்த்தக சங்கம் கவலை !
மதுரையில் உணவகங்கள் மூடும் அபாயம்? வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: உணவு விலையை இருமடங்காக்கும் ஹோட்டல் சங்கத்தின் எச்சரிக்கை!
மதுரையில் உணவகங்கள் மூடும் அபாயம்? வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: உணவு விலையை இருமடங்காக்கும் ஹோட்டல் சங்கத்தின் எச்சரிக்கை!
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget