மேலும் அறிய

Natural compost: காஞ்சிபுரம் குப்பைகளிலிந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம்; விவசாயிகளுக்கு வினியோகம்

குப்பைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் காஞ்சிபுரம் பெரு நகராட்சி சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு உரக்கிடங்கில் மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட  இயற்கை உரத்தினை பெருகராட்சி  சார்பில்  அப்பகுதியை சேர்ந்த விவசாயிக்கு பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி  இலவசமாக  வழங்கினார்.

Natural compost: காஞ்சிபுரம் குப்பைகளிலிந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம்; விவசாயிகளுக்கு வினியோகம்
 
காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் செவிலிமேடு பகுதியில் இயங்கி வரும்  பசுமை உரக்கிடங்கில்   தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு எடுத்து வரப்பட்டு அவை மக்கும் குப்பை,மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பையிலிருந்து உரமாக தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு பல்வேறு பகுதியிலிருந்து நாளொன்றுக்கு 65 டன் குப்பைகள் கொண்டுவரப்பட்டு அதிலிருந்து 31 டன் மக்கும் குப்பையாக சேகரிக்கப்பட்டு பின்னர் அதனை இயற்கை உரமாக தயாரித்து வருகின்றனர்.
 

Natural compost: காஞ்சிபுரம் குப்பைகளிலிந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம்; விவசாயிகளுக்கு வினியோகம்
இந்நிலையில் இந்த மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரமாக தயாரிக்கப்பட்ட  5டன்  உரத்தை   செவிலிமேடு விவசாயி கார்த்திகேயனுக்கு பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி இன்று  இலவசமாக வழங்கினார்.  
இயற்கை உரத்தை இலவசமாக பெற்றுக்கொண்ட விவசாயி கார்த்திகேயன் நகராட்சி அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு இயற்கை உரத்தை டிராக்டரில் ஏற்றிச் சென்றார்.
 
 
மேலும் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி இது குறித்து கூறுகையில் ,
நகர்ப்பகுதிகளில் தினசரி சேகரிக்கும் குப்பைகளில் மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரமாக தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக தொடர்ந்து வழங்கி வருகிறோம். தேவைப்படும் விவசாயிகள் நகராட்சியை தொடர்பு கொண்டு இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ரசாயன உரம் கலக்காமல் இயற்கை உரம் பயன்படுத்தி செய்யப்படும் விவசாயம் மண் வளத்தையும், மனித வளத்தையும் பாதுகாக்கும் என்றார்.
 

Natural compost: காஞ்சிபுரம் குப்பைகளிலிந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம்; விவசாயிகளுக்கு வினியோகம்
அந்த வகையில் செவிலிமேடு பகுதியில் உள்ள உரம் கிடங்கில் பிள்ளையார் பாளையம், செவிலிமேடு, ஓரிக்கை, மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளிட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் பெறப்பட்ட குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை 48 நாள்கள் குப்பையை பதப்படுத்தி இயற்கை உரமாக்கி விவசாயிகளிடம் அள்ளித்து வருகின்றனர். அந்தவகையில் செவிலிமேடு பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வரும் கார்த்திகேயன் என்கிற விவசாயிக்கு இலவசமாக 5 டன் இயற்கை உரத்தை நகராட்சி ஆணையர் மகேஷ்வரி வழங்கினார். தற்போது வரை 30 டன் வரை இயற்கை உரம் இருப்பு உள்ளதாகவும் உரம் கேட்டு வரும் விவசாயிகளுக்கு உரம் அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.  

Natural compost: காஞ்சிபுரம் குப்பைகளிலிந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம்; விவசாயிகளுக்கு வினியோகம்
 
தற்போது இயற்கை உரம் கிலோ ரூ.5 வீதம் , டன் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரத்திரம் என வெளியில் விற்கப்படுகிறது. இங்கு போதுமான அளவு இருப்பு இருப்பதால் இதனை பயன்படுத்தி விவசாயிகள் இலவசமாக வழங்கப்படும் உரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரமேஷ்குமார்,செவிலிமேடு பகுதி நகராட்சி பணியாளர் ரோஸ்மேரி ஆகியோரும் உடன் இருந்தனர். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

AC Vs Cooler Vs Fan: வெயில் தாங்க முடியலையா.? ஏசி, கூலர், ஃபேன்; இவற்றிலிருந்து அதிகபட்ச கூலிங்கை எப்படி பெறுவது.? இதோ டிப்ஸ்
வெயில் தாங்க முடியலையா.? ஏசி, கூலர், ஃபேன்; இவற்றிலிருந்து அதிகபட்ச கூலிங்கை எப்படி பெறுவது.? இதோ டிப்ஸ்
ரூ.3.க்கு நாமக்கல் முட்டை.. குறைந்த விலைக்கு முட்டை வாங்கிய பொதுமக்களுக்கு அதிர்ச்சி !
ரூ.3.க்கு நாமக்கல் முட்டை.. குறைந்த விலைக்கு முட்டை வாங்கிய பொதுமக்களுக்கு அதிர்ச்சி !
மெக்கானிக் தேவையில்லை! ஏசியை இப்படி கிளீன் பண்ணுங்க! எலக்ட்ரிக் பில்லைக் குறைக்கும் ஸ்மார்ட் டிப்ஸ்!
மெக்கானிக் தேவையில்லை! ஏசியை இப்படி கிளீன் பண்ணுங்க! எலக்ட்ரிக் பில்லைக் குறைக்கும் ஸ்மார்ட் டிப்ஸ்!
தூக்கத்தை கெடுக்கும் ‘ஓவர் திங்கிங்’.. தப்பிப்பது எப்படி? இதோ எளிய வழிமுறைகள்!
தூக்கத்தை கெடுக்கும் ‘ஓவர் திங்கிங்’.. தப்பிப்பது எப்படி? இதோ எளிய வழிமுறைகள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: விஜய் ஜெயித்தால் ஆதரவு கேட்கும் முடிவில் பாஜக? - நயினார் நாகேந்திரன் பதில்!
Nainar Nagendran: விஜய் ஜெயித்தால் ஆதரவு கேட்கும் முடிவில் பாஜக? - நயினார் நாகேந்திரன் பதில்!
Trump US Iran War: “நான் ஏன் அத உங்க கிட்ட சொல்லணும்.?“; செய்தியாளர்களிடம் கோபமடைந்த ட்ரம்ப்; அப்படி என்ன கேட்டாங்க.?
“நான் ஏன் அத உங்க கிட்ட சொல்லணும்.?“; செய்தியாளர்களிடம் கோபமடைந்த ட்ரம்ப்; அப்படி என்ன கேட்டாங்க.?
Velmurugan: லட்சக்கணக்கில் பேரம்.. வேல்முருகனுடன் டீல் பேசிய விஜய் தரப்பு.. நடந்தது என்ன?
Velmurugan: லட்சக்கணக்கில் பேரம்.. வேல்முருகனுடன் டீல் பேசிய விஜய் தரப்பு.. நடந்தது என்ன?
TN Power Cut: கொளுத்தும் கோடை வெயில்... தமிழ்நாட்டில் மீண்டும் அமலுக்கு வரும் மின்வெட்டு!
TN Power Cut: கொளுத்தும் கோடை வெயில்... தமிழ்நாட்டில் மீண்டும் அமலுக்கு வரும் மின்வெட்டு!
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
AC Vs Cooler Vs Fan: வெயில் தாங்க முடியலையா.? ஏசி, கூலர், ஃபேன்; இவற்றிலிருந்து அதிகபட்ச கூலிங்கை எப்படி பெறுவது.? இதோ டிப்ஸ்
வெயில் தாங்க முடியலையா.? ஏசி, கூலர், ஃபேன்; இவற்றிலிருந்து அதிகபட்ச கூலிங்கை எப்படி பெறுவது.? இதோ டிப்ஸ்
Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!
Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
Embed widget