மேலும் அறிய

ஸ்பூன், ஃபோர்க் எல்லாம் வேண்டாம்! கையால் சாப்பிடுவது பாரம்பரியம் மட்டுமல்ல… அதுல இவ்ளோ இருக்கு!

உணவை கைகளால் தொட்டு, அதன் அமைப்பை உணர்ந்து, அதன் வெப்பநிலையை கைகளால் தெரிந்து உண்பது உணவுடனான தொடர்பை ஆழமாக்கும்.

மரபுகள் மங்கிப்போய், புதிய வடிவங்களை எடுக்கும் பின் நவீனத்துவ உலகில், அதனால் மறக்கப்பட்ட பல முக்கியமான ரத்தினங்களுக்கு மீண்டும் அங்கீகாரம் அளிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. சில மாற்றங்கள் கண்டிப்பாக மறுக்க முடியாதவை, அவை காலத்தின் தேவையாக கூட இருக்கும். அவை பல விதங்களில் நம்மையும், நம் சமூகத்தையும் முன்னோக்கி கூட்டி செல்லலாம். அவற்றை கடைபிடிப்பது கண்டிப்பாக அவசியம் தான். ஆனால் பழைய பழக்கங்களில் சிலவற்றிலும் இன்றியமையாத நலன்கள் இருந்திருக்கும். அப்படி நம்மில் பலர் மறந்துவிட்ட பழக்கம் கைகளால் உணவை சாப்பிடும் பழக்கம். நிச்சயமாக, பளபளப்பான ஸ்பூன் மற்றும் ஃபோர்க்குகள் நம் வீட்டு டைனிங் டேபிளில் இருக்கும். ஆனால் இன்னும் பலர் தங்கள் உணவை விரல் நுனியில் தொட்டு உணர்ந்து உண்பதை அனுபவிக்கிறார்கள். இந்தியா, கிரீஸ் மற்றும் எகிப்து போன்ற பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள் தொடர்ந்து உணவை கையால் சாப்பிட்டு வருகின்றனர். இருப்பினும் பாரம்பரியத்தை தாண்டி, ஆரோக்ய நன்மைகள் அதில் இருப்பது தான் ஹைலைட். கைகளால் உண்ணுதல் கவனத்துடன் சாப்பிட உதவும். உணவை கைகளால் தொட்டு, அதன் அமைப்பை உணர்ந்து, அதன் வெப்பநிலையை கைகளால் தெரிந்து உண்பது உணவுடனான தொடர்பை ஆழமாக்கும். மெதுவாக உண்பதன் மூலம், நாம் ஒவ்வொரு வாய் உணவையும் ருசித்து சாப்பிடலாம். 

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதம் இயற்கையுடன் எவ்வாறு இணக்கமாக வாழ வேண்டும் என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. ஆயுர்வேதத்தின் படி, உங்கள் கைகளால் சாப்பிடுவது சுகாதாரமானது மட்டுமல்ல, உங்கள் புலன்களுக்கும் செரிமானத்திற்கும் நன்மை பயக்கும் என்று தெரிகிறது. ஒவ்வொரு விரலும் விண்வெளி (கட்டை விரல்), காற்று (ஆள்காட்டி விரல்), நெருப்பு (நடுவிரல்), நீர் (மோதிர விரல்) மற்றும் பூமி (சிறு விரல்) ஆகிய ஐந்து உறுப்புகளில் ஒன்றைக் குறிக்கிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. நாம் கைகளால் சாப்பிடும்போது, இந்த கூறுகளை செயல்படுத்தி, நம் உடலில் உள்ள ஆற்றல்களை சமநிலைப்படுத்தும் சைகை செய்கிறோம் என்கிறது. 

ஸ்பூன், ஃபோர்க் எல்லாம் வேண்டாம்! கையால் சாப்பிடுவது பாரம்பரியம் மட்டுமல்ல… அதுல இவ்ளோ இருக்கு!

  1. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

கைகளால் சாப்பிடுவது விரல்கள் மற்றும் கை தசைகளின் இயக்கத்தை உள்ளடக்கியது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் மூட்டுகளில் விறைப்பைத் தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்: CM Salem Visit: கலைஞர் சிலை, ஈரடுக்கு நகர பேருந்து நிலையம்... சேலத்தில் இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

  1. செரிமானத்தைத் தூண்டுகிறது

கைகளால் சாப்பிடுவது, வாய் மற்றும் வயிற்றில் செரிமான நொதிகள் மற்றும் சாறுகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது, இது உணவை மிகவும் திறமையாக உடைக்க உதவதோடு, அஜீரணம், வீக்கம் மற்றும் வாயுவைத் தடுக்கிறது.

ஸ்பூன், ஃபோர்க் எல்லாம் வேண்டாம்! கையால் சாப்பிடுவது பாரம்பரியம் மட்டுமல்ல… அதுல இவ்ளோ இருக்கு!

  1. அதிகமாக உண்பதைத் தடுக்கிறது

உணவின் அமைப்பை கை தெரிந்து கொள்வதால், சுவை மற்றும் நறுமணம் ஆகியவற்றை நம்மை அதிகமாக உணர செய்கிறது. இது நமது திருப்தியின் அளவை உடனடியாக எட்ட செய்கிறது. இதனால் நாம் அதிகமாக சாப்பிடுவதைத் தடுத்து ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க உதவுகிறது.

  1. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது

கைகளால் சாப்பிடுவது உண்ணும் வேகத்தைக் குறைக்கும், இது உணவின் கிளைசெமிக் குறியீட்டைக் குறைத்து இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும். நீரிழிவு அல்லது ப்ரீடயபட்டீஸ் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

  1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கைகளால் சாப்பிடுவது நமது தோல், வாய் மற்றும் குடலில் இருக்கும் சில நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உதவும். இந்த பாக்டீரியாக்கள் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்து நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
Embed widget