மேலும் அறிய

Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா? கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?

Nighttime Anxiety: இரவு நேர மன உளைச்சலுக்கான உண்மையான காரணங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Nighttime Anxiety: இரவு நேர மன உளைச்சலை தடுப்பது, தவிர்ப்பதற்கான காரணங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

இரவுநேர மன உளைச்சல்:

ஒரு நல்ல இரவு தூக்கத்தின் மூலம்தான் நமது உடலுக்கும், மனதிற்குமான முழு ஓய்வு கிடைக்கும். ஆனால், இரவில் சரியாகத் தூங்காதவர்கள் பலவிதமான பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். அது நீண்ட நாள் நீடித்தால் உடல் நலத்துக்குக் கேடாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே, தூக்கம் மிகவும் முக்கியமானது. ஆனால், அது அனைவருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. அந்த வகையில், இரவில் தூக்கத்தைக் கெடுக்கும் காரணிகளில் கவலையும் ஒன்று. இரவு நேர கவலை தூக்கத்தை கடுமையாக பாதிக்கும். எந்த ஒரு சிறிய பிரச்னையிலும் கவனம் செலுத்த முடியாமல் போவதாலும், கார்டிசோல் போன்ற மன அழுத்தம் மற்றும் கவலை ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதாலும் கவலை ஏற்படுகிறது. குறிப்பாக இரவில் ஏன் கவலை அதிகரிக்கிறது? அறிகுறிகள் என்ன? அதை கையாளவது எப்படி? போன்றவை கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

கவனம் செலுத்த இயலாமை

சில நேரங்களில் சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்தக்கூடாது. அதாவது தேவையில்லாத விஷயங்களை அதிகம் மனதில் போட்டுக்கொண்டு  சிந்திக்க வேண்டாம். இல்லையெனில் அவை கவலையை ஏற்படுத்தும். நாள் முழுவதும் வேலையில் அழுத்தமாக இருக்கும் போது, ​​நாள் பல்வேறு சங்கடமான விளைவுகளுக்கு இடையே கடந்து செல்கிறது. இரவில் காணப்படும் தனிமை பல்வேறு பிரச்னைகளை மனதில் கொண்டு வருகிறது. அந்த நேரத்தில் இந்த பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப தவறினால் கவலை ஏற்படும். இந்தக் கவலையால் தூக்கம் என்பதே உங்களுக்கு தூரமாகலாம். 

கார்டிசோல்:

மன அழுத்தம் உடலில் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அளவை அதிகரிக்கிறது. இப்படி கார்டிசோல் அதிகரித்தால், மன அழுத்தம் அதிகமாகி, கவலையாக மாறுகிறது. எண்ணங்கள் அதிகமாகும் போது கார்டிசோலின் அளவு அதிகரிக்கும். இரவின் தனிமையில் கடந்த கால நிகழ்வுகள் நினைவுக்கு வருவதாலும், தேவையற்ற குற்ற உணர்வுகளாலும் எண்ணங்கள் உக்கிரமடைகின்றன. இது கவலைக்கு ஒரு முக்கியமான காரணம். கவலை மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது.

கவலையின் விளைவுகள்

பதற்றம் தொடங்கும் போது, ​​இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. மெதுவாக தசை இறுக்கும் உணர்வு உணரப்படுகிறது. சுவாசிப்பதில் சிரமம் போன்ற உணர்வு ஏற்படும். நெற்றியிலும் உள்ளங்கையிலும் வியர்வை வழியும். இத்தகைய அறிகுறிகள் இரவில் தனிமையில் தோன்றினால், மேலும் பதற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது.

எவ்வளவு யோசித்தாலும் வாழ்க்கையின் சில அம்சங்களை மாற்ற முடியாது என்ற புரிதல் இல்லாத போது, ​​அது மிகை சிந்தனையை ஏற்படுத்துகிறது. அதிகமாகச் சிந்திப்பது கவலையின் முதல் படி. எதிர்காலத்தைப் பற்றிய கவலை என்பது தவறாக மாறலாம். கவலையில் இருக்கும் போது பணியில் கவனம் செலுத்த முடியாது. கடுமையான அமைதியின்மை துன்புறுத்த தொடங்கும்.

கவலைக்கான காரணங்கள்

  • நாள் முழுவதும் அழுத்தத்தில் வேலை செய்வது இரவில் கவலையை அதிகரிக்கும்.
  • சிலரின் ஹார்மோன்கள் இரவில் வித்தியாசமாக செயல்படுகின்றன. சிலருக்கு பகலில் சுறுசுறுப்பாக செயல்படும் ஹார்மோன்கள் இரவிலும் அதிகமாக இருப்பதால் கவலை ஏற்படுகிறது.
  • நீண்ட நாட்களாக நல்ல தூக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் கவலை ஏற்படும் அபாயம் உள்ளது.
  • இரவில் காஃபின், ஆல்கஹால் மற்றும் சர்க்கரை உணவுகளை உட்கொள்வது தூக்கத்தை சீர்குலைத்து கவலையை ஏற்படுத்தும்.
  • ரத்த சோகை, தைராய்டு மற்றும் பிற நோய்களும் இரவுநேர கவலையை ஏற்படுத்தும்.
  • இரவுநேர கவலை பெரும்பாலும் கடுமையான உளவியல் பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
  • அடுத்த நாள் ஏதேனும் முக்கியமான நிகழ்வுகள் வரும்போது கவலை ஏற்படலாம்.  

தவிர்க்க செய்ய வேண்டியது என்ன?

  • தூங்கும் இடம் அல்லது படுக்கையை மாற்றலாம்
  • உங்கள் மனதை குழப்பமான எண்ணங்களிலிருந்து திசைதிருப்ப தூங்கச் செல்லும் முன் எதையாவது படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
  • தூங்குவதற்கு முன் 10 நிமிடம் தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும்
  • இனிமையான இசையைக் கேளுங்கள் மன அமைதியை தரலாம்
  • மூச்சைக் கவனிப்பது மற்றும் இதயத் துடிப்பைக் கேட்பது போன்ற நமது உடலுடனான தொடர்பை அதிகரிக்கும் செயல்பாடுகளும் சிறந்த தூக்கத்தைத் தூண்டும்

(பொறுப்பு துறப்பு: மனசிக்கல்களுக்கு உரிய மருத்துவ வல்லுநர்களை அணுகி ஆலோசனைகளை பெறுவதே நல்லது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகள் என்பது, பல்வேறு வல்லுநர்கள் பல்வேறு வித்தியாசமான சூழல்களில் வழங்கிய ஆலோசனைகளின் தொகுப்பு மட்டுமே ஆகும். ) 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget