விழுப்புரம் இளைஞர்களே! 1000+ காலிப் பணியிடங்கள்! உடனடி வேலை... மிஸ் பண்ணிடாதீங்க
விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 17.10.2025 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற (17.10.2025) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு இரு முறை பெரிய அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு
மேலும், செப்டம்பர் 2025 ம் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் (17.10.2025) வெள்ளிக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 25-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.
கல்வி தகுதி
விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை ITI, Diploma, B.E/B.Tech, Nursing, Pharmacy போன்ற கல்வி தகுதியுடைய வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலை நாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புகளுடன் (BIO - DATA) இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்
மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906, 9080515682 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு பயனடையுமாறு மாவட்ட வேலை வாய்ப்பு முகாம் அலுவலகம் தெரிவித்துள்ளது.





















