மேலும் அறிய

EMRS Recruitment 2023: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியர் பணி; விண்ணப்பிக்க நாளையே கடைசி

EMRS Recruitment 2023: " இந்நியமனங்கள் முற்றிலும் தற்காலிகமானது புதியதாக நியமிக்கப்படம் பணி என்பதால்  இந்த கல்வியாண்டு 2023-2024 அல்லது பள்ளியின் கடைசி வேலை நாள் வரை மட்டுமே பணியில் தொடரமுடியும். "

2023-2024 ஆம் ஆண்டிற்கு குமிழி ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிக்கு தொகுப்பூதிய ஆசிரியர்கள் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (17.08.2023) கடைசியாகும்.

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி ( Eklavya Model Residential Higher Secondary School )

செங்கல்பட்டு ( Chengalpattu Jobs ) : செங்கல்பட்டு மாவட்டம் வண்டலுார் வட்டம் குமிழி ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப்பள்ளியில் ( Eklavya Model Residential Higher Secondary School )  கீழே குறிப்பிட்டுள்ள காலியாக உள்ள பட்டதாரி/ முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி காப்பாளர்  காலிப்பணியிடங்களுக்கு  பணிநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி விவரம்:

வேதியியல்

கணிதம்

ஆங்கிலம்

காப்பாளர்

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க எம்.எஸ்.சி. எம்.ஏ. பி.எட். உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விதிமுறைகள் என்னென்ன ?

  1. இந்நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுவதால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம்.ரூ.15,000/- முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம்.ரூ.18,000/- மற்றும் காப்பாளர்களுக்கு மாதம்.ரூ.12,000/- வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
  2. இந்நியமனங்கள் முற்றிலும் தற்காலிகமானது புதியதாக நியமிக்கப்படம் பணி என்பதால்  இந்த கல்வியாண்டு 2023-2024 அல்லது பள்ளியின் கடைசி வேலை நாள் வரை மட்டுமே பணியில் தொடரமுடியும்.
  3. மேற்படி காலிப்பணியிடங்களுக்கு பழங்குடியினர் இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியான பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் இல்லாதபட்சத்தில், பட்டியல் இனத்தவர்களும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் விண்ணப்பதாரர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறைகள்:

மேற்கண்ட தற்காலிக பணிகளுக்கு பள்ளி அலுவலகத்தில் நேரில் சென்றோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.08.2023 அன்று மாலை 5.00 வரை 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Vaasan Nagar,

Melakottaiyur,

Tamil Nadu 600127

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1ERCR0NkogChgHoOMn99fOcmqbtSsBbJt/preview என்ற லிங்கை க்ளிக் செய்து காணவும்.

*******

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission-SSC)  1,876பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (16.08.2023 ) கடைசியாகும்.

பணி விவரம்:

எல்லை பாதுகாப்பு படை,மத்திய தொழில் பாதுகாப்பு படை,  மத்திய ரிசர்வ் போலீஸ் படை , இந்தோ - திபெத் எல்லை போலீஸ் ,  சாஸ்த்ரா சீமா பால்,  டெல்லி போலீசில் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Sub-Inspector (Exe.) in Delhi Police-Male -109

Sub-Inspector (Exe.) in Delhi Police-Female -53

Sub-Inspector (GD) in CAPFs -1714

மொத்த பணியிடங்கள் - 1876

ஊதியம்:

ரூ.35, 400 முதல் ரூ.1,12,400 வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. 

கல்வித் தகுதி:

 இளநிலைப் படிப்பில் எதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு:

 01.08.2023 தேதியின் அடிப்படையில் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் சலுகை உள்ளது. முழு விவரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.  உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு மையம்:

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்,  ஆகிய மாவட்ட மற்றும் புதுச்சேரியில் நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும்.  பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது:

www.sss.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.08.2023

மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1CD3QhRvj6oGRxFKkzPBD8NqTkEbKp45L/view- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

இந்தப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவர். 


 

Freelancer Jhansi Rani. MA
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

RRB NTPC தேர்வு முடிவுகள் எப்போது? 18 மாதங்களாக காத்திருக்கும் தேர்வர்கள்! ட்ரெண்டாகும் கோரிக்கை!
RRB NTPC தேர்வு முடிவுகள் எப்போது? 18 மாதங்களாக காத்திருக்கும் தேர்வர்கள்! ட்ரெண்டாகும் கோரிக்கை!
அரசு ஊழியர்களுக்கு 30% ஊதியம் குறைப்பா? திமுக தொடர்ந்தால் இங்கும் பேராபத்து- அன்புமணி எச்சரிக்கை!
அரசு ஊழியர்களுக்கு 30% ஊதியம் குறைப்பா? திமுக தொடர்ந்தால் இங்கும் பேராபத்து- அன்புமணி எச்சரிக்கை!
இனி சென்னை, பெங்களூரு போக வேண்டாம்! புதுச்சேரியிலேயே வருது பிரம்மாண்ட IT பூங்கா... புதுச்சேரியின் புதிய முகவரி இதோ!
இனி சென்னை, பெங்களூரு போக வேண்டாம்! புதுச்சேரியிலேயே வருது பிரம்மாண்ட IT பூங்கா... புதுச்சேரியின் புதிய முகவரி இதோ!
சட்டத் துறையில் சாதிக்க விரும்புவோருக்கான வாய்ப்பு! NCDRC-யில் பணிபுரிவது எப்படி? தகுதிகள் மற்றும் சம்பள விவரங்கள்
சட்டத் துறையில் சாதிக்க விரும்புவோருக்கான வாய்ப்பு! NCDRC-யில் பணிபுரிவது எப்படி? தகுதிகள் மற்றும் சம்பள விவரங்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD SILVER RATE Mar. 24th: இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
EPS Campaign Date : நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
Israel Iran War Netanyahu: “அவர் என்ன நிறுத்துறது, நான் சொல்றேன்.. போர் தொடரும்“; நெதன்யாகு அறிவிப்பால் எகிறிய பதற்றம்
“அவர் என்ன நிறுத்துறது, நான் சொல்றேன்.. போர் தொடரும்“; நெதன்யாகு அறிவிப்பால் எகிறிய பதற்றம்
IRCTC New Refund Rules: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் ரத்து, ரீஃபண்ட் விதிகளில் அதிரடி மாற்றம்!
IRCTC New Refund Rules: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் ரத்து, ரீஃபண்ட் விதிகளில் அதிரடி மாற்றம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்...
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
Embed widget