மேலும் அறிய

Railway Jobs : பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? தென்னக ரயில்வேயில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்புகள்..

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேரடி நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் மற்றும் தேர்வாகும் நபர்கள் ஈரோடு மாவட்டத்தில் தொழில் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள எலக்ட்ரீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.

இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட மண்டலமாக தென்னக ரயில்வே விளங்கிவருகிறது.  சென்னை, திருச்சி, சேலம், மதுரை,பாலக்காடு திருவனந்தபுரம், உள்பட ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள் இந்த ரயில்வே துறையின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு அவ்வப்போது பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும் நிலையில், தற்போது  சேலம் கோட்டத்தில் எலக்ட்ரீசியன் பிரிவில் தொழில் பழகுநராவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் முறை? தேர்வு செய்யும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

  • Railway Jobs : பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? தென்னக ரயில்வேயில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்புகள்..

தென்னக ரயில்வே பணிக்கானத் தகுதிகள்:

பதவி – எலக்ட்ரீசியன்

கல்வித்தகுதி :

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் – ஈரோடு

விண்ணப்பிக்கும் முறை:

தென்னக ரயில்வேயில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதார்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

முதலில் https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/621368bdeb150a3d86325714 மற்றும் https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6213695456921e30e977b39a என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும். southern Railway Erode careers 2022 Application from என்பதை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதனையத்து இப்பணியிடங்களுக்கு கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை தவறில்லாமல் பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதோடு மட்டுமின்றி விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து சரியாகப் பூர்த்தி செய்த பின்னர் ஆஃப்லைன் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Office of the Sr.Divisional Electrical Engineer,

Rolling Stock,  Electric Loco Shed,

Southern Railway ,

Salem Divisionm, Erode,

Tamilnadu – 638 002.

விண்ணப்பக்கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேரடி நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வாகும் நபர்கள் ஈரோடு மாவட்டத்தில் தொழில் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு 6 நாள்கள் பயிற்சி வழங்கப்படும்..

சம்பளம் :

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்பணிக்கு கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6213695456921e30e977b39a என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

 

தலைப்பு செய்திகள்

TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்... மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்...மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
படிப்பிற்கு ஏற்ற அரசு வேலை! காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடைசி தேதி எப்போது தெரியுமா?
படிப்பிற்கு ஏற்ற அரசு வேலை! காஞ்சிபுரத்தில் ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடைசி தேதி?
மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அதிரடி அறிவிப்பு!
மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அதிரடி அறிவிப்பு!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TTV Statement : விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
Embed widget