RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
RRB Recruitment 2026: டெக்னீஷியன் (Technician) பணியிடங்களை நிரப்புவது குறித்த சுருக்கமான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

இந்திய ரயில்வே துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக, ஆர்ஆர்பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி 2026ஆம் ஆண்டிற்கான டெக்னீஷியன் (Technician) பணியிடங்களை நிரப்புவது குறித்த சுருக்கமான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களில் காலியாக இருக்கும் மொத்தம் 6,565 டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
இந்த 6565 காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற ஜூன் 30ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.
பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு வாரியான காலியிடங்கள், விண்ணப்பக் கட்டணம், சம்பள விவரம் மற்றும் தேர்வு நடைபெறும் முறை உள்ளிட்ட அனைத்து முழுமையான விவரங்கள் அடங்கிய விரிவான அறிவிப்பு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் ஜூன் 29ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வயது வரம்பு எவ்வளவு?
இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது Technician Grade I Signal 33 ஆகும். அதேபோல Technician Grade III பதவிக்கு உச்ச வயது வரம்பு 30 வயது ஆகும். எனினும் அரசு விதிகளின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பப் பதிவு தொடங்கியவுடன், தேர்வர்கள் ஆர்.ஆர்.பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் வழியாக மட்டுமே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் உரிய இணைப்பைக் க்ளிக் செய்து, தங்களது அடிப்படை விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர், கேட்கப்பட்டுள்ள கல்விச் சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை சரியான அளவுகளில் பதிவேற்றம் செய்து, உரிய விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
ரயில்வே துறையில் சேர வேண்டும் என்ற கனவோடு தேர்விற்குத் தயாராகி வரும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு இந்த 6565 பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒரு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது.
தேர்வு முறை
இந்த பணிகளுக்கான தேர்வு முறையானது கணினி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய கட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
விண்ணப்பப் பதிவு தொடங்கும் தேதியான ஜூன் 30-ஆம் தேதிக்கு முன்பாகவே, விண்ணப்பிப்பதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கூடுதல் தகவல்கள் மற்றும் அடுத்தக்கட்ட அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியமாகும்.
Before You Go
Job Recruitment : மாதம் ரூ.1லட்சம் வரை சம்பளம்..! விண்ணப்பிப்பது எப்படி..?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















