மேலும் அறிய

RRB Group D: ரயில்வேயில் 22,000 வேலைவாய்ப்பு: இளைஞர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்- விண்ணப்ப தேதி மாற்றம்! RRB அறிவிப்பு

RRB Group D 2026 Registration: ஜனவரி 21ஆம் தேதி தொடங்கவிருந்த ரயில்வே குரூப் டி பணியிடங்களுக்கானபதிவு, தற்போது ஜனவரி 31, 2026 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ரயில்வே துறையில் காலியாக உள்ள சுமார் 22,000 குரூப் டி (Group D) பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவுத் தேதியை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) திடீரென மாற்றியுள்ளது.

முன்னதாக ஜனவரி 21ஆம் தேதி தொடங்கவிருந்த இந்தப் பதிவு, தற்போது மாற்றியமைக்கப்பட்டு ஜனவரி 31, 2026 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்தத் தேதி மாற்றம் கூடுதல் கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மார்ச் 2, 2026 இரவு 11:59 மணி கடைசி நாளாகும்.

பணியிடங்கள் மற்றும் சம்பளம்

மொத்தம் உள்ள 22,000 பணியிடங்களில் பெரும்பாலானவை பொறியியல் துறையைச் சார்ந்த 'டிராக் மெயின்டெய்னர் கிரேடு IV' (Track Maintainer Grade IV) போன்ற பதவிகளாகும். தேர்வாகும் நபர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின்படி (Level 1) ஆரம்ப அடிப்படைச் சம்பளமாக மாதம் ரூ. 18,000 வழங்கப்படும்.

வயது வரம்பு


ஜனவரி 1, 2026 அன்று விண்ணப்பதாரர்கள் 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி, ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு மற்றும் கட்டணம்


தேர்வு நடைமுறையானது கணினி வழித் தேர்வு (CBT) மற்றும் உடற்தகுதித் தேர்வு (PET) என இரண்டு கட்டங்களாக நடைபெறும். பொது, ஓபிசி மற்றும் இ.டபிள்யூ.எஸ் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். இதில் முதல் நிலைத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ரூ. 400 கட்டணம் திருப்பித் தரப்படும்.

முக்கியக் குறிப்பு

ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தால் அவை நிராகரிக்கப்படும். ஆனால், ஒரே விண்ணப்பத்தில் தகுதிக்கேற்ப பல பதவிகளைத் தேர்வு செய்துகொள்ளலாம். கல்வித் தகுதி (ITI அல்லது 10-ஆம் வகுப்பு) குறித்த கூடுதல் விவரங்களுக்கு ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் புகைப்படம் ஆகியவை 10-ஆம் வகுப்புச் சான்றிதழில் உள்ள விவரங்களுடன் ஒத்துப்போவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் முன்கூட்டியே புதுப்பித்துக் கொள்வது நல்லது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget