மேலும் அறிய

காவல்துறையில் வேலை வேண்டுமா..? மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்களுக்காக, இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தவுள்ள 3,352 காவல் சார்பு ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்களுக்காக, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது என என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.

காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது, மொத்தம் 3,352 காவல் சார்பு ஆய்வாளர் (Sub-Inspector of Police) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை ஏற்கனவே பெற்றுள்ளது. இத்தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

புதிய தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம்

இந்த ஆண்டு TNUSRB தேர்வில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, முன்பு பொது ஒதுக்கீடு மற்றும் துறை ஒதுக்கீட்டிற்கு எனத் தனித்தனியே நடத்தப்பட்டு வந்த எழுத்துத் தேர்வானது, தற்போது பொதுப் பிரிவினர் மற்றும் துறைப் பிரிவினர் இருவருக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தப்பட உள்ளது.

தேர்வானது பின்வரும் பிரிவுகளைக் கொண்டிருக்கும்

  • பொது அறிவு மற்றும் சைக்காலஜி: இதில் பொது அறிவுப் பிரிவில் 80 கேள்விகளும், சைக்காலஜி (உளவியல்) பிரிவில் 60 கேள்விகளும் என மொத்தம் 140 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 70 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • தமிழ் தகுதித் தேர்வு: இது முழுக்க முழுக்கத் தமிழ் மொழியின் தகுதியைச் சோதிக்கும் வகையில் 100 மதிப்பெண்களுக்காக நடத்தப்பட உள்ளது. இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.

இந்த மாற்றங்களை மனதில் வைத்து, தேர்வுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்களின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் இம்முயற்சியை எடுத்துள்ளது.

இலவச மாதிரித் தேர்வுகள் திட்டம்

உத்தேசமாக டிசம்பர் 2025-இல் நடைபெறவுள்ள இந்த எழுத்துத் தேர்விற்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள், புதிய தேர்வு முறையின் கீழ் பயிற்சி பெறுவது மிகவும் அவசியமாகும். இதனை கருத்தில் கொண்டு, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாகச் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயிலும் வட்டத்தில் இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இலவச மாதிரித் தேர்வுகளின் மூலம், தேர்வர்கள் தங்களின் தயாரிப்பு நிலையைச் சரிபார்த்துக் கொள்ளவும், புதிய தேர்வு முறையைப் புரிந்துகொள்ளவும், நேர நிர்வாகத் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.

விண்ணப்பிக்கும் முறை

இலவச மாதிரித் தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமும் தகுதியும் உள்ள தேர்வர்கள், பின்வரும் ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அணுகிப் பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.

 * பாஸ்போர்ட் அளவுப் புகைப்படம்.

 * ஆதார் அட்டை நகல்.

பதிவு செய்யும் நாட்கள் மற்றும் நேரம்

தேர்வர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 10 மணிக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

முகவரி

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், 2வது தெரு, பாலாஜி நகர், கால் டாக்ஸி பெட்ரோல் பங்கிலிருந்து பூம்புகார் செல்லும் வழி,ம யிலாடுதுறை.

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்

பதிவு செய்து கொள்ள விரும்பும் தேர்வர்கள், 9499055904 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, காவல் சார்பு ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இளைஞர்களே அலர்ட்! புதுச்சேரியில் அக்னிவீர் ராணுவ முகாம்! இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்...
இளைஞர்களே அலர்ட்! புதுச்சேரியில் அக்னிவீர் ராணுவ முகாம்! இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்...
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்... மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்...மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
படிப்பிற்கு ஏற்ற அரசு வேலை! காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடைசி தேதி எப்போது தெரியுமா?
படிப்பிற்கு ஏற்ற அரசு வேலை! காஞ்சிபுரத்தில் ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடைசி தேதி?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
Embed widget