Bridal Makeup Artistry Course : ஒரு ரூபாய் செலவு இல்லாமல் Bridal Makeup பயிற்சி.! மாத சம்பளம் இவ்வளவா.? விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
Makeup Artistry Course : தாட்கோ மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இளைஞர்களுக்கு சொந்த தொழில் தொடங்க உதவிடும் வகையில் அழகுக்கலை பயிற்சியானது வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி முடித்தவர்கள் மாதம் மாதம் நல்ல ஊதியம் ஈட்டும் வாய்ப்பையும் உருவாக்கி தரப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அழகுக்கலை பயிற்சி
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது பலரின் கனவாகும். அதிலும் தற்போது வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தில் இருக்கும் இடத்தில் இருந்தே பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொருவரும் தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது. எனவே மாதத்தில் 2 அல்லது 3 முறையாவது பியூட்டி பார்லர் செல்வார்கள். ஒரு முறை சென்று வந்தாலே 5ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகும் நிலை உள்ளது. அதிலும் திருமணத்தின் போது மணப்பெண்களுக்கு மேக்கப் போடுவதற்காகவே பல ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஆதி திராவிட, பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சி
இந்த நிலையில் இளம் தலைமுறையினருக்கு உதவிடும் வகையில், அழகுக்கலை பயிற்சியானது வழங்க இருப்பதாகவும், இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு முதற்கட்டமாக 25ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட வாய்ப்பை உருவாக்கி தரப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ. மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (Master Certification in Bridal Makeup Artistry Course) சிகை அலங்காரம் (Diploma in Creative hair dressing chemical treatment Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
பயிற்சியில் இணைய தகுதிகள் என்ன.?
இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும், மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் மேலும் திருச்சி மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதி பெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கிபடிப்பதாற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
மாத வருமானம் என்ன.?
இப்பயிற்சியில் தேர்ச்சிபெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலைவாய்ப்பும் அந்நிறுவனத்தின் மூலமாக ஆரம்பகால மாத ஊதியமாக சுமார் ரூ.15000/- முதல் ரூ.25,000/- வரையும் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திதரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















