மேலும் அறிய

பொதுப்பணித்துறையில் 500 அப்ரண்டிஸ் நியமனம்: டிப்ளமோ பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்!

சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் ரூ.9 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 500 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள டிப்ளமோ பட்டதாரிகள் உடனடியாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழக அரசின்கீழ் இயங்கும் பொதுப்பணித் துறை அமைச்சகத்தால் தமிழ்நாடு பொதுப்பணித் துறை நிர்வகிக்கப்படுகிறது. அரசுத் துறை கட்டுமானங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பெரும்பாலான கட்டிடங்கள் பராமரிப்பு, பாலங்கள், சாலைகள், மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானங்களை நிர்வகிக்கும் இத்துறையின் கீழ் செயற்பொறியாளர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது பொதுப்பணித்துறையின் கீழ் பயிற்சி பெறுவதற்கான 500 அப்ரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • பொதுப்பணித்துறையில் 500 அப்ரண்டிஸ் நியமனம்: டிப்ளமோ பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்!

இந்த பயிற்சியானது தேசிய தொழிற்பயிற்சித்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் நிலையில், டிப்ளமோ பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலம் நடைபெறும் இந்த பயிற்சிக்கு தேர்வாகும் நபர்களுக்கு உதவித்தொகையாக ரூ. 8ஆயிரம் மற்றும் ரூ.9 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 500 அப்ரண்டிஸ் நியமனம் செய்யப்படவுள்ள நிலையில் இதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்த அனைத்து விபரங்களையும் இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அப்ரண்டிஸ் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 500

வயது வரம்பு – அரசாங்க விதிமுறைகளின் படி வயது வரம்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

தமிழக பொதுப்பணித்துறையில் தொழில் பழகுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் டிப்ளமோ சிவில் மற்றும் டிப்ளமோ எலக்ரிக்கல் அன் எலக்ட்ரானிஸ் முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் http://portal.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் வருகின்ற ஜனவரி 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஜனவரி 25 ஆம் ஆதேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் எதுவும் கிடையாது.

தேர்வு முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தொழில் பழகுநராக நியமனம் செய்யப்படுவார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் ரூ.9 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

  • பொதுப்பணித்துறையில் 500 அப்ரண்டிஸ் நியமனம்: டிப்ளமோ பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்!

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Notification_PWD_2021-22.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பணியில் எப்படியாவது சேர வேண்டும் என்ற ஆசையில் உள்ள டிப்ளமோ முடித்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி பயன்பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
SBI கிளார்க் வேலை 2026: 1538 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI கிளார்க் வேலை 2026: 1538 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget