மேலும் அறிய

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஓதுவார் பயிற்சிக்கு வரவேற்கப்படும் விண்ணப்பங்கள்..

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஓதுவர் பயிற்சி பள்ளிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்முறையாக துவங்கப்பட்டது. அருணாச்சலேஷ்வரர் திருக்கோவிலில் ஓதுவார் மூன்று வருடங்களாக பயிற்சிப் பள்ளி துவங்கப்பட்டது. இந்த ஓதுவர் பயிற்சி பள்ளியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது, குறைந்த அளவில் மூன்று மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கப்பட்டு ஓதுவார் பாடசாலையில் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு இறுதியில் இவர்களுடைய ஓதுவர் பயிற்சியை முடித்துள்ளனர். அதன் பின்னர் ஓதுவார் பயிற்சிப்பள்ளி நடத்தவில்லை.  சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஓதுவார் பயிற்சி பள்ளியில் பயின்ற மூன்று மாணவர்களில் அண்ணாமலை என்ற மாணவர் மட்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓதுவார் பணிநியமனம் செய்யப்பட்டதில் கோவிலில் வேலை கிடைத்து, ஓதுவாராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.


மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஓதுவார் பயிற்சிக்கு வரவேற்கப்படும் விண்ணப்பங்கள்..

அதனைத்தொடர்ந்து இன்று  தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர்   திருக்கோயில்களில் திருமுறைகளை குறைவின்றி ஓதிட ஏதுவாக திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சார்பாக  பயிற்சிப்பள்ளி நடைபெற்று வருகிறது. அரசு அரசாணைப்படி 3 ஆண்டுகள் நடைபெறும். இதில் பயிற்சி பெற விரும்பும் இந்து மதத்தை சேர்ந்த தகுதியுடையவர்கள் உரிய விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஓதுவார் பயிற்சிக்கு வரவேற்கப்படும் விண்ணப்பங்கள்..

 

இதற்கான மாணவர் சேர்க்கைக்கான தகுதிகள்;

1.இந்த ஓதுவார் பயிற்சியில் சேர எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது.
2. இதில் சேரும் விருப்பம் உடையவர் குறைந்தபட்சம் மாணவர்களின்  13 வயது நிரம்பியவர்கள் இருந்து அதிகபட்சமாக 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருக்க வேண்டும்
3. இயற்கையாகவே சாரீரமும் குரல்வளம் உடல் வளமும் பெற்று இருத்தல் வேண்டும் சமய தீட்சை பெற்றிருத்தல் வேண்டும்
4. பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆகியவர்கள் ஒருவரைக் கொண்டு உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும்.
5. பயிற்சி நிலையத்தில் பயில விரும்பும் மாணவர்களுக்கு சமயம் கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்

6. பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு உறைவிடம் சீருடை பயிற்சி காலத்தில் உதவித்தொகை ( 3000) ரூபாய் ஆகியவற்றை வழங்கப்படுகின்றது.  இதுபோன்ற 6 தகுதிகள் உடையவர்களை மட்டுமே ஓதுவர் பயிற்சி பள்ளியில் சேரமுடியும் எனவும் , இதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி ஓதுவர் பயிற்சிப்பள்ளி இணை ஆணையர் அலுவலர் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருவண்ணாமலை என்னும் முகவரிக்கு அனுப்பவேண்டுமென தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஓதுவார் பயிற்சிக்கு வரவேற்கப்படும் விண்ணப்பங்கள்..

 

ஓதுவார்கள் கோவில்களில் செய்யக்கூடிய பணிகள்;

 ஓதுவார் என்போர் தமிழகத்தில் உள்ள சைவ சமய ஆலயங்களில் தேவார திருவாசகப் பண்களைப் பாடும் பணியில் தம்மை அர்ப்பணித்த இறைத்தொண்டர்கள் ஆவார். முற்காலத்தில் மன்னர்கள் ஓதுவார்களுக்கு நிலம் அளித்து ஆதரித்தனர். பரம்பரை பரம்பரையாக ஓதுவார்கள் திருமுறைப் பண்களைப் பாடி வந்தனர். காலப்போக்கில் இந்‌நிலை மாறி ஓதுவார் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே தமிழக அரசு சென்னை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் ஆகிய இடங்களில் ஓதுவார் பயிற்சி மையங்‌களைத் துவங்கியது. இம்மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Embed widget