மேலும் அறிய

வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் - கைவிடக்கோரி கரூரில் செவிலியர்கள் போராட்டம்

’’வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த கோரி அரசுத் தரப்பில் இருந்து எந்த உத்தரவும் வராத நிலையில் அரசியல்வாதிகள் இதில் தலையிடுவதாக புகார்’’

வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசியல்வாதிகள் தலையீடு உள்ளதாக கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் தர்ணாவில் ஈடுபட்டனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 150க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 5 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செவிலியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் - கைவிடக்கோரி கரூரில் செவிலியர்கள் போராட்டம்

அப்போது செவிலியர் சங்க நிர்வாகிகளிடம் கரூர் சரக காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. அனைத்து சுகாதாரத்துறை செவிலியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், பொது சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து சுகாதார செவிலியர்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியில் போதிய கவனம் செலுத்த இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.


வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் - கைவிடக்கோரி கரூரில் செவிலியர்கள் போராட்டம்

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க

அந்தந்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து அந்தந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தும்படி கட்டாயப்படுத்தி வருகிறார்கள். இது நடைமுறையில் இல்லாத செயலாகும். இது குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு அரசு உத்தரவும் வெளியிடப்படாத நிலையில் அரசியல்வாதிகள் இவ்வாறு செய்வது முற்றிலும் தவறான செயல். இதை வன்மையாக கண்டிக்கிறோம். கொரோனா தடுப்பூசி பணியில் காலை 7 மணி முதல் மாலை 7 வரை தொடர்ச்சியாக பணி மேற்கொள்வதால் ஊழியர்களை சோர்வடையும் சூழல் உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள ஆணையிட வேண்டும்.


வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் - கைவிடக்கோரி கரூரில் செவிலியர்கள் போராட்டம்

தடுப்பூசி முகாம் பணிக்கு வாகன வசதி ஏற்பாடு செய்து தரவேண்டும். தடுப்பூசி போடும்போது சமூகவிரோதிகள் காழ்ப்புணர்ச்சியுடன் தாக்குதலுக்கு உள்ளாக்குவதை தடுத்திட காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். தடுப்பூசி பணியில் அரசியல்வாதிகள் தலையீடு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக நடைபெறும் வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget