மேலும் அறிய

Black fungus: கருப்பு பூஞ்சை சிகிச்சையில் இளைஞர்களுக்கு முன்னுரிமை? புதிய அறிவுறுத்தல் கூறுவது என்ன?

கடந்த வாரம் கருப்பு புஞ்சை நோய் தொடர்பான சிகிச்சைக்கு மத்திய அரசு விரைவாக ஒரு அறிவுறுத்தலை மாநிலங்களுக்கு அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலை சற்று குறைய தொடங்கியுள்ளது. கொரோனா நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட நபர்கள் சிலருக்கு கருப்பு புஞ்சை நோய் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கருப்பு புஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கருப்பு புஞ்சை நோய்க்கு அளிக்கப்படும் அம்போடெரிசின்-பி மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாக வாய்ப்பு எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக கடந்த ஜூன் 1ஆம் தேதி வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், "கருப்பு புஞ்சை பாதிப்பு சிகிச்சை தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒரு அறிவுறுத்தலை தர வேண்டும். மேலும் கருப்பு புஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்ட இளைஞர்களுக்கு சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏனென்றால் வயதானவர்கள் ஏற்கெனவே தங்களில் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டனர். தற்போது தேவைப்படும் அளவிலிருந்து 3ல் ஒரு பங்கு அம்போடெரிசின் மருந்துகள் மட்டும் இருப்பதால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு அறிவுறுத்தலை வழங்க வேண்டும்"எனக் கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஒரு அறிவுறுத்தலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு கருப்பு புஞ்சை நோய் தொடர்பாக ஒரு மருத்துவ அறிவுறுத்தலை அளித்துள்ளது. இந்த அறிவுறுத்தலில் இருக்கும் விவரம்  தொடர்பாக  ஒரு தனியார் செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் புதிய அறிவிப்பில் அம்போடெரிசின் பி மருந்தை கருப்பு புஞ்சை நோய் ஏற்பட்ட இளைஞர்களுக்கு முதலில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 


Black fungus: கருப்பு பூஞ்சை சிகிச்சையில் இளைஞர்களுக்கு முன்னுரிமை? புதிய அறிவுறுத்தல் கூறுவது என்ன?

அதன்பின்னர் யாருக்கெல்லாம் அறுவை சிகிச்சை செய்ய முடியாதோ அவர்களுக்கு உடனடியாக அம்போடெரிசின் பி மருந்து கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். ஏனென்றால் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் கருப்பு புஞ்சை நோய் அதிகரித்து நோயாளிகள் உயிரிழக்க நேரிடம் சூழல் உருவாகும். மேலும் கருப்பு புஞ்சை நோயாளிகளுக்கு முயன்றால் அறுவை சிகிச்சை மூலம் அந்தப் புஞ்சை தொற்றை நீக்க முயற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டிலும்  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கருப்பு புஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்துகள் இல்லாததால் உடனடியாக 30 ஆயிரம் அம்போடெரிசின் குப்பிகள் அளவுக்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். அத்துடன் தமிழ் நாட்டில் கருப்பு புஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 25 கோடி ரூபாய் நிதியையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

கருப்பு புஞ்சை நோய் ஏற்கனவே உள்ள வியாதிதான் என்றாலும், கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களும், சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களும் அதிக அளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது. மேலும் சிலர் இந்த நோய் காரணமாக உயிரிழக்கவும் நேரிடுகிறது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: ''எங்க ஊரு டாக்டர் அவரு..'' மருத்துவரின் சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் திரட்டிய கிராம மக்கள்!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget