திருவண்ணாமலை : 32 பேருக்கு உறுதியானது தொற்று : 14383 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா தொற்று இன்று 32 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை மாவட்டத்தில் 503ஆயிரத்து 191 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 52ஆயிரத்து 149 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 32 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை . இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 650-ஆக உயர்ந்துள்ளது
மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் , தண்டரம்பட்டு , ஆரணி , செய்யார், வந்தவாசி , போளுர் , உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், போன்ற இடங்களில் தொற்றால் பாதிக்கப்படவர்கள் குணமாகி வீட்டிற்கு சென்றதால் மையங்கள் அனைத்தையும் காலிசெய்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் தற்போது 392 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 14383 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்ற முகாமில் கோவிஷீல்டு முதல் தடுப்பூசி 10482 நபர்களும் இரண்டாவது தடுப்பூசி 3392 நபர்களும் கோவேக்சின் முதல் தடுப்பூசி 370 இரண்டாவது தடுப்பூசி 139 நபர்கள் செலுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலையில் நாளை 36 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது தடுப்பூசி முகாம்கள் அமைத்துள்ள இடங்கள் முத்து விநாயகர் தெரு. சித்தா மருத்துவமனை, புதுதெரு முஸ்லிம் பள்ளி, டவுன் ஹால் நகராட்சி பள்ளி சின்னக்கடை தெரு, குழந்தைகள் நல மையம் நகராட்சி ஆரம்பப்பள்ளி பேகோபுரம், தியாகி அண்ணாமலையார் அரசு மேல்நிலைப்பள்ளி வன்னியன் குளத் தெரு, சண்முக அரசு மேல்நிலைப்பள்ளி செங்கம் ரோடு, நகராட்சி நடுநிலைப்பள்ளி தாமரை நகர், நகராட்சி தொடக்கப்பள்ளி காக்கா நகர், நீயும் முன் நர்சரி பள்ளி சூர்யா நகர் இடங்களில் பொதுமக்கள் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு சார்பில் நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக நடவடிக்கை மூலமாக நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் முழு மூச்சுடன் தற்காப்பை மேற்கொள்வதையும், முகக்கவசம் அணிவதையும், சானிடைசர் பயன்படுத்துவதையும், சமூக விலகலையும் கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும்.





















