மேலும் அறிய

பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து உறுதியான கொரோனா தொற்று.. அச்சத்தில் பெற்றோர்

அடுத்தடுத்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில்  உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கும், ஆண்டிமடம்  தென்னூரில்  உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  அவர்கள் இருவரையும்  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதற்கிடையில் அரியலூரில் கொரோனா  தொற்று பரவிய அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நேற்று நோய்த்தொற்று உறுதியானது. அந்த மாணவியும் இப்போது அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவல் பரவி உடன் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்கள் மகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் இதையடுத்து அந்த பள்ளியில் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு அறைகள் மூடப்பட்டன


பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து உறுதியான கொரோனா தொற்று.. அச்சத்தில் பெற்றோர்

இதேபோன்று தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மேலையூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு, நேற்று முன்தினம் காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் நோய்த்தொற்று பரிசோதனை செய்துள்ளனர், மற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த மாணவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பரிசோதனை முடிவில் மாணவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக சுகாதாரத் துறை மூலம் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ,மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் பரிசோதனை செய்யப்பட்டு, பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

தமிழக அரசு பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பள்ளிகள் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், முகக்கவசங்கள் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பு அறைகள் அமைத்திருக்க வேண்டும்,  ஒவ்வொரு வகுப்பறைகளிலும் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும், குறிப்பாக ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பு ஊசிகளை செலுத்திகொண்டு இருக்க வேண்டும் அதே போன்று 18 வயதிற்கு மேல் உள்ள மாணவர்களும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவேண்டும் என அரசு தெரிவித்திருந்தது.


பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து உறுதியான கொரோனா தொற்று.. அச்சத்தில் பெற்றோர்

தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் தொடர்பில் இருந்த  அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் அந்த வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளித்து தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றார். மேலும்  அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், மாணவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை பள்ளி வளாகம் உருவாக்கித் தர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அரசு கூறிய விதிகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட்டு வருகிறதா, மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளதா ,என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அடுத்தடுத்து மாணவர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் ஏற்கனவே செயல்பட்டு வரும் பிற பள்ளிகளில் கண்காணிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget