Tamil Nadu Coronavirus LIVE : கொரோனாவால் மேலும் 91 பேர் உயிரிழப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 5 ஆயிரத்து 127 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,63,817 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 5,127ஆக அதிகரித்துள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 65 ஆயிரத்து 874 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 732 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 308 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 314 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 308 ஆக உள்ளது.கொரோனாவால் மேலும் 91 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,290 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 64 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 27 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8161 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 9, கோவை, திருச்சியில் தலா 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் நாளை முதல் ஹோட்டல்கள் திறக்க அனுமதி
கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து டெல்லியில் நாளை முதல் ஹோட்டல்களை திறக்கவும், ஊரடங்கு விதிகளை பின்பற்றி நாளை முதல் திருமண மண்டபங்களை 50 பேருடன் திறந்து நடத்த அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் இன்று மேலும் 89 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 4 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
தனியார் காப்பகத்தில் 33 குழந்தைகளுக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அமைந்துள்ள கலியாம்பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் 33 குழந்தைகள் உட்பட 40 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.





















