மேலும் அறிய

மூன்றாவது அலை வந்தால் சமாளிப்பதற்கு போதிய படுக்கைகள் உள்ளன - தமிழக அரசு தகவல்..!

"கொரோனா இரண்டாவது அலையிலிருந்து இந்தியா விடுபட்டுவருகிறது. ஆனால், மக்கள் மறுபடியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தவறவிடுகின்றனர். மாஸ்க், சோஷியல் டிஸ்டன்சிங் மீண்டும் மறக்கப்படுகிறது. இப்படியே சென்றால், இன்னும் 6 முதல் 8 வாரங்களில் மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது.."2 என்று டெல்லி எய்மஸ் மருத்துவமனை இயக்குநர் ரஞ்சித் குலேரியா எச்சரித்திருக்கிறார்.

மூன்றாவது அலையாக கொரோனா வேகமெடுத்தாலும் அதனை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

"கொரோனா இரண்டாவது அலையிலிருந்து இந்தியா விடுபட்டுவருகிறது. ஆனால், மக்கள் மறுபடியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தவறவிடுகின்றனர். மாஸ்க், சோஷியல் டிஸ்டன்சிங் மீண்டும் மறக்கப்படுகிறது. இப்படியே சென்றால், இன்னும் 6 முதல் 8 வாரங்களில் மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது.."2 என்று டெல்லி எய்மஸ் மருத்துவமனை இயக்குநர் ரஞ்சித் குலேரியா எச்சரித்திருக்கிறார். இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜரானார். அவர் வாதிடும்போது, "ஒருவேளை கொரோனா மூன்றாவது அலை ஏற்படின் அதை சமாளிக்க 66,000 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. 

ஜூன் 17ம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.12 கோடி பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இதில், 86,01,926 பேர் 45 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையோர். 26,86,722 பேர் 18 முதல் 44 வயது கொண்டோர். கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு 84 நாட்களுக்கு முன்னதாகவே இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அதேபோல், வெளிநாடு செல்வோர், கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு, விளையாட்டு வீரர்கள்ளுக்கு, ஒலிம்பிக்ஸில் பங்கேற்கவுள்ளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த முன்னுரிமை வசதியை ஆகஸ்டு 31 வரை செயல்படுத்தவுள்ளது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்காக பிரத்யேகமாக தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்துகிறது. குடியிருப்புப் பகுதிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் அரசு மேற்கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், நாடு முழுவதும், பிரதமரின் புதிய கொரோனா தடுப்பூசித் திட்டம் நேற்று செயல்படத் தொடங்கியநிலையில் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3.9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகம் முழுவது 7,427 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியானது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 24,29,924. தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,37,209. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,29,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget