மேலும் அறிய

Covid 3rd Wave: ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து எப்படி தப்பிப்பது? Dr. பிரியா சம்பத்குமார் சொல்வது என்ன?

மிகக்குறைந்த வயது மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்ட நோயாளிகள் பெரும்பாலானோர் எந்தவித மருத்துவமனை சிகிச்சையின்றி  குணமடைகின்றனர். 

பலரும் கணித்து கூறியது போலவே, நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,097 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய நாளை விட, இது 20,718 அதிகமாகும். 

இந்நிலையில், பிரபல தொற்றுநோயியல் மருத்துவர் பிரியா சம்பத்குமார் கொரோனா  நோய்த்தொற்றின் பல்வேறு கட்டங்களின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்த தேசம் மூன்றாவது பெருந்தொற்று அலைக்கு தயாராகிவரும் நிலையில், இவரின் அறிவுரைகள் பல்வேறு வகைகளில்  உதவும். 

பிரியா சம்பத்குமார் தனது ட்விட்டர் பதிவில், "மூன்றாவது அலையின் அறிகுறியாக, தற்போது கொரோனா பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. மோசமான விளைவுகளை குறைப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டியதிருந்தாலும், இதுவரை பெருமளவு உயிரிழப்பை ஏற்படுத்தி வந்த டெல்டா ரக வைரஸை விட  ஒமிக்ரான் கொரோனா வைரஸின் தீவிரத்தன்மை குறைவானதாக இருக்கும் என்ற தகவல் நம்பிக்கையளிப்பதாக உள்ளன.     

காரணம்?   

முதலாவதாக, தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்தொகையின் விகிதம் அதிகரித்துள்ளது (அல்லது) குறிப்பிட்ட சதவிகிதம் பேர் முன்னர் ஏற்பட்ட கொரோனா நோய்த் தொற்றின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளனர்; இரண்டாவதாக, ஒமிக்ரான் ரக வைரஸ் தாக்குதலின்போது, தீவிர நுரையீரல் (நிமோனியா) மற்றும் ரத்த பிராணவாயு செறிவூட்டல் தேவைகள் குறைந்து காணப்படுகின்றன.

நாம் எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும்?  

தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தகுதியான நபர் என்றால் பூஸ்டர் தடுப்பூசியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற அனைத்து கொரோனா  பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். 

பாதிப்பு இருப்பது தெரியவந்தால்..

தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்; உள்ளூர்மட்ட வழிகாட்டு நெறிமுறைகள்படி, குறைந்தது ஐந்து நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தல் நிலையில்  இருக்க வேண்டும். 

மிகக்குறைந்த வயது மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்ட நோயாளிகள் பெரும்பாலானோர் எந்தவித மருத்துவமனை சிகிச்சையின்றி  குணமடைகின்றனர். 

நாள்பட்ட நோய்கள் உடையவர்கள், அறுபது வயதுக்கு மேற்பட்ட  மூத்த குடிமக்கள், தடுப்பூசி செலுத்தாதவர்கள் போன்ற அதிக ஆபத்தும் அபாயமும் உள்ள பிரிவினருக்கும் மட்டுமே மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறுகின்றனர். 

தீவிர பாதிப்பை எப்படி எதிர் கொள்ளலாம்?  

தற்போது, இந்தியாவில் கிடைக்கும் மோனோகுளோனல் நோய் எதிர்ப்புக் கிருமி (monoclonal antibodies) ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவில்லை.   

கொரோனா அறிகுறிகள் தென்பட்ட ஐந்து நாட்களுக்குள் மோல்னுபிரவீர், ரெம்டெசிவிர், பக்ஸ்லோவிட்' (Paxlovid) போன்ற தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டால், தீவிர மருத்துவ பிரச்சனையைத் தவிர்க்கலாம்.   

மோல்னுபிரவீர்: தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத இதர ஆபத்து நிறைந்த  நபர்களுக்கு இந்த மருந்து அதிகம் பயனளிக்கும். இதர பிரிவு நோயாளிகளுக்கு இதனால் பலனில்லை. அதிகம் பயன்படுத்தக்கூடாது. வைரஸை உருமாற்றம் அடையச் செய்யும். கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள அனுமதியில்லை.  

Molnupiravir pill: கொரோனா சிகிச்சையில் மோல்னுபிரவீர்.. என்ன மருந்து இது? எவ்வாறு பயனளிக்கும்? 

ரெம்டெசிவிர் மருந்து: 

ரத்த நாளங்களில் நேரடியாக தடுப்பு மருந்தை செலுத்த வேண்டும் (IV Medication) 

மிகவும் ஆபத்து நிறைந்த நபர்களுக்கு மட்டும் இந்த மருந்து அறிவுறுத்தப்படுகிறது.

பக்ஸ்லோவிட்' (Paxlovid): இந்தியாவில் கிடைப்பது இல்லை 

கூடுதல் தகவல்கள்: 

நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை  வெளிநோயாளிகளுக்கு போடக் கூடாது; ஆக்ஸிஜன் சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நோயாளிகளுக்கு கட்டாயம் போடக் கூடாது. 

இவர்மெக்டின் (Ivermectin),குளோரோகுயின் (chloroquine),  ஃபேவிபிராவிர் (Favipiravir) போன்ற மருந்துகள் தேவையற்றது.     

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IND W vs SA W Final: அசத்திய ஷஃபாலி- தீப்தி ! முதல் முறையாக உலகக் கோப்பையை தூக்கிய இந்தியா! கண்ணீருடன் வெளியேறி கேப்
IND W vs SA W Final: அசத்திய ஷஃபாலி- தீப்தி ! முதல் முறையாக உலகக் கோப்பையை தூக்கிய இந்தியா! கண்ணீருடன் வெளியேறி கேப்
Sengottaiyan:
Sengottaiyan: "அரசனை நம்பி.." செங்கோட்டையனை கழட்டி விட்ட பாஜக - என்னதான் செய்யப்போறாரோ?
Eps vs Seeman: ”இது தான் அரசியல் நாகரிகமா?”  பெருந்தன்மையாக நடந்துக்கொண்ட இபிஎஸ்! சீமானை வெளுத்து வாங்கும் அதிமுகவினர்
Eps vs Seeman: ”இது தான் அரசியல் நாகரிகமா?” பெருந்தன்மையாக நடந்துக்கொண்ட இபிஎஸ்! சீமானை வெளுத்து வாங்கும் அதிமுகவினர்
IND W vs SA W Final: ஆரம்பத்தில் ஷாஃபாலி அதிரடி.. இறுதியில் சொதப்பிய இந்தியா.. தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு என்ன?
IND W vs SA W Final: ஆரம்பத்தில் ஷாஃபாலி அதிரடி.. இறுதியில் சொதப்பிய இந்தியா.. தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யின் தனிப்படை EX. IG தலைமையில் குழு பரபரக்கும் பனையூர் | Karur Stampede | TVK Vijay
Gingee Masthan| கோரிக்கை வைத்த நரிக்குறவர்கள்பாதியில் எழுந்து சென்றமஸ்தான் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Women forced to prove Menstruation|’’PERIODS-னு ஏமாத்துறீங்களா?PHOTOகாட்டுங்க’’அத்துமீறிய அதிகாரிகள்
கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade
OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND W vs SA W Final: அசத்திய ஷஃபாலி- தீப்தி ! முதல் முறையாக உலகக் கோப்பையை தூக்கிய இந்தியா! கண்ணீருடன் வெளியேறி கேப்
IND W vs SA W Final: அசத்திய ஷஃபாலி- தீப்தி ! முதல் முறையாக உலகக் கோப்பையை தூக்கிய இந்தியா! கண்ணீருடன் வெளியேறி கேப்
Sengottaiyan:
Sengottaiyan: "அரசனை நம்பி.." செங்கோட்டையனை கழட்டி விட்ட பாஜக - என்னதான் செய்யப்போறாரோ?
Eps vs Seeman: ”இது தான் அரசியல் நாகரிகமா?”  பெருந்தன்மையாக நடந்துக்கொண்ட இபிஎஸ்! சீமானை வெளுத்து வாங்கும் அதிமுகவினர்
Eps vs Seeman: ”இது தான் அரசியல் நாகரிகமா?” பெருந்தன்மையாக நடந்துக்கொண்ட இபிஎஸ்! சீமானை வெளுத்து வாங்கும் அதிமுகவினர்
IND W vs SA W Final: ஆரம்பத்தில் ஷாஃபாலி அதிரடி.. இறுதியில் சொதப்பிய இந்தியா.. தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு என்ன?
IND W vs SA W Final: ஆரம்பத்தில் ஷாஃபாலி அதிரடி.. இறுதியில் சொதப்பிய இந்தியா.. தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு என்ன?
Karunas Slams TVK Vijay:
Karunas Slams TVK Vijay: "சூட்டிங் எதாவது கூப்பிட்டா வருவாரு" SIR ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த விஜய்! கருணாஸ் விளாசல்
மின் கோபுர வழித்தட இழப்பீடு ; விவசாயிகளுக்கு இனி அதிக நிவாரணம் ! தமிழக அரசின் அதிரடி முடிவு
மின் கோபுர வழித்தட இழப்பீடு ; விவசாயிகளுக்கு இனி அதிக நிவாரணம் ! தமிழக அரசின் அதிரடி முடிவு
’’S.I.R. முயற்சிகளை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்க வேண்டும், இல்லைன்னா..’’ முதல்வர் எச்சரிக்கை!
’’S.I.R. முயற்சிகளை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்க வேண்டும், இல்லைன்னா..’’ முதல்வர் எச்சரிக்கை!
Gen Z-க்களின் அதிரடி முடிவு! இந்த பதவி வேண்டாம்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Gen Z-க்களின் அதிரடி முடிவு! இந்த பதவி வேண்டாம்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Embed widget