மழைக்காலத்தில் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவீர்களா? - உடனே இந்த ஆபத்தை தடுங்க!
பலருக்கும் ஒருநாளின் ஒருமுறை டீ மற்றும் பிஸ்கட் இல்லாமல் வாழ்க்கை கழியாது. இவை இரண்டும் சேர்த்து உண்பதால் உங்கள் குடல் சுவர் பாதிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது.

மழைக்காலம் தொடங்கி விட்டது. சூடாக ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே மழையை ரசிக்கும் எண்ணம் பலருக்கும் இப்போதே தொடங்கியிருக்கும். குறிப்பாக சூடாக பால், டீ, காபி மற்றும் பிஸ்கட் தொடங்கி பஜ்ஜி, பிரியாணி என எல்லாம் சகட்டுமேனிக்கு எடுப்போம். ஆனால் இவையெல்லாம் உடலுக்கு நன்மையா என எப்போவாவது யோசித்து பார்த்திருப்போமா?.. கிடையாது. நாம் இந்த கட்டுரையில் மழைக்காலங்களில் தேநீர் மற்றும் பிஸ்கட் சாப்பிடும் பழக்கங்கள் எப்படி குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதைப் பற்றிக் காணலாம்.
பலருக்கும் ஒருநாளின் ஒருமுறை டீ மற்றும் பிஸ்கட் இல்லாமல் வாழ்க்கை கழியாது. இவை இரண்டும் சேர்த்து உண்பதால் உங்கள் குடல் சுவர் பாதிக்கப்படுகிறது. அதற்கு காரணம் இந்த இரண்டு உணவில் இருக்கும் குறிப்பிட்ட மூலப்பொருட்களே ஆகும். டீ மற்றும் பிஸ்கட்டை எடுப்பதால் குடல் சுவரில் அசௌகரியம் ஏற்படுகிறது. இதனால் நமக்கு வயிறு உப்புசம் , மந்தமான செரிமானம் போன்ற பிரச்னைகள் உண்டாகிறது.
எப்படி பிரச்னை உண்டாகிறது?
பிஸ்கட்டில் சுத்திகரிக்கப்பட்ட மாவு, செயற்கை இனிப்பூட்டிகள், எமல்சிஃபையர்கள், தாவர எண்ணெய், சர்க்கரைகள் ஆகியவை இருக்கும். இவரை டீ அல்லது காபியுடன் சேரும்போது தான் பிரச்னை உண்டாகிறது.
ஏன் இந்த பிரச்னை முக்கியத்துவம் பெறுகிறது?
மனித உடலில் மிக முக்கிய பங்கை குடல் தடுப்புச் சுவர் மிக முக்கியமானது. காரணம் இரத்த ஓட்டத்தில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் நுழைவதை தடுக்கிறது. இதனால் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்கு உடலுக்கு உறிஞ்சப்படுகிறது. குடல் சுவரை பராமரிப்பது மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் செயல்படும் விதத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், செரிமான நலனைப் பேணுவதற்கும் முடியும்.
பிஸ்கட்களில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரையானது குடலில் அழற்சியை ஏற்படுத்தி, ஆரோக்கியமற்ற குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கக்கூடும். அதேபோல் மழை காலத்தில் அளவுக்கு அதிகமாக டீ அல்லது காபி குடிப்பதால் அதிலுள்ள காஃபின் செரிமான மண்டலத்தை எரிச்சலூட்டக்கூடும். இதன் காரணமாக நீங்கள் சிறிது நேரம் சாப்பிடாமல் இருந்தாலும் அமிலத்தன்மையும் மோசமாக்கி விடும்.
Also Read: மழைக்காலத்தில் தலைவலியாக அமையும் பல் பிரச்னை.. சிகிச்சையே இல்லாமல் தீர்ப்பது எப்படி?
அடிக்கடி வீக்கம், வாயு, மலச்சிக்கல், உணவு ஒவ்வாமைகள், சோர்வு, ஒழுங்கற்ற குடல் போன்ற அறிகுறிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேசமயம் பொரித்த தின்பண்டங்கள், இரவில் தாமதமாகச் சாப்பிடுவது, குறைந்த அளவு தண்ணீர் அருந்துவது, அதிகப்படியான பாக்கெட் உணவுகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர், வாழைப்பழங்கள், ஓட்ஸ், பருப்பு வகைகள், மழைக்கால காய்கறிகள், உடலுக்கு உகர்ந்த பானங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். சீரக நீர் அதிகமாக அருந்தலாம். வயிற்று உப்புசம் தீவிரமானாலோ அல்லது அடிக்கடி ஏற்பட்டாலோ, இரைப்பை மற்றும் குடல் மருத்துவரை அணுக வேண்டும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ட்ரெண்டிங் செய்திகள்






















