![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Fathima Vijay Antony: நீ இல்லாமல் வாழ முடியவில்லை.. திரும்பி வந்துவிடு.. விஜய் ஆண்டனி மனைவியின் உருகவைக்கும் பதிவு!
Fathima Vijay Antony :மகளின் நினைவாக வாடித் துடிக்கும் விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி, எக்ஸ் தளத்தில் உருக்கமான போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
![Fathima Vijay Antony: நீ இல்லாமல் வாழ முடியவில்லை.. திரும்பி வந்துவிடு.. விஜய் ஆண்டனி மனைவியின் உருகவைக்கும் பதிவு! Vijay antony wife Fathima penned a melting note in remembrance of their 16 years daugher meera Fathima Vijay Antony: நீ இல்லாமல் வாழ முடியவில்லை.. திரும்பி வந்துவிடு.. விஜய் ஆண்டனி மனைவியின் உருகவைக்கும் பதிவு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/10/25ba8fa1f2735d7690a0c58ba383b3ec1696935782016572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளராக ஏராளமான ரசிகர்களை பெற்றவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). சமீபத்தில் தான் இவர் நடித்த ஆக்ஷன் திரில்லர் ஜானரில் 'ரத்தம்' திரைப்படம் வெளியானது. இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
விபத்து
இதற்கு முன்னர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன் 2 ' படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நடுக்கடலில் ஷூட்டிங் நடைபெற்று கொண்டு இருக்கும்போது, மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு மோசமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஏராளமான அறுவை கிச்சைகளுக்கு பிறகு அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார். அந்த சம்பவத்தின் வடு மறைவதற்குள் அவரின் வாழ்க்கையில் அடுத்த அடியாக எதிர்பாராதவிதமாக அவரின் மகளை பறிகொடுத்தார் விஜய் ஆண்டனி.
மகளின் இழப்பு
இந்த நிலையில் கடந்த மாதம் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தை நிலைகுலைய செய்ததோடு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. 16 வயதான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளின் இழப்புக்கு பின்னர் உடைந்து போன விஜய் ஆண்டனி, மகளின் நினைவாக சோசியல் மீடியா பக்கங்களில் உருக்கமான பதிவுகளை பதிவு செய்து வந்தார். அந்த துயர சம்பவத்தில் இருந்து மீள முடியவில்லை என்றாலும் பணம் போட்டு தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைய கூடாது என்ற நோக்கத்திலும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
உருக்கமான போஸ்ட்
விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமாவும் மகளின் நினைவுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வரும் நிலையில் எக்ஸ் தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை மிகுந்த மன வலியுடன் போஸ்ட் செய்துள்ளார்.
"நீ 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் உன்னை எனக்கு அருகிலேயே வைத்து பாதுகாத்து இருப்பேன். சூரியனுக்கும் சந்திரனுக்கும் கூட உன்னைக் காட்டி இருக்க மாட்டேன். உன்னுடைய நினைவுகளால் நான் தினம் தினம் இறக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. அப்பா அம்மாவிடம் திரும்பி வந்துவிடு. லாரா உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறாள். லவ் யூ தங்கம்..." என மிகவும் உருக்கமான பதிவை போஸ்ட் செய்துள்ளார். பாத்திமா தன்னுடைய இந்தப் பதிவில் விஜய் ஆண்டனியையும் டேக் செய்துள்ளார்.
ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் இந்த போஸ்டுக்கு ஏராளமான ரசிகர்கள் கமெண்ட் மூலம் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)