மேலும் அறிய

Vijay Antony | "இசை அறிவில்ல.. நடிக்கக்கூட தெரியாது" - உணர்ச்சிவசப்பட்டு பேசிய விஜய் ஆண்டனி..

கோடியில் ஒருவன் சக்ஸஸ் மீட்டில் விஜய் ஆண்டனி மனதை திறந்து பல விஷயங்களைப் போட்டு உடைத்திருக்கிறார்.

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் வந்து, பல பாடல்கள் பாடியும் உள்ள விஜய் ஆண்டனி சமீப காலமாக புதிய புதிய அவதாரங்களை எடுத்து வருகிறார். கடைசியாக தியேட்டரில் வெளியாகி நன்றாக ஒட்டியிருக்கும் திரைப்படமான கோடியில் ஒருவன் திரைப்படத்திற்கு அவர் தான் எடிட்டிங் செய்துள்ளார். அவர் நடிப்பில் பயங்கர ஹிட் ஆன பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே எழுதி இயக்கி வருகிறார். இது போன்று வித்தியாச அவதாரங்களில் ஈடு படுவதால் இப்போதெல்லாம் அவர் நடிக்கும் படங்களுக்கே அவர் இசையமைப்பதில்லை.

கோடியில் ஒருவன் திரைப்படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது. ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். இன்ஃபினிட்டி பிலிம்ஸ் வெளியிட்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய் ஆண்டனி பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்பதுபோல் பல பெரிய கனவுகள் இருக்கும். அவை எல்லாவற்றுக்கும் மதிப்பெண்கள் வேண்டும். எனக்கு படிப்பு வரவில்லை. அதனால் அம்மாவை ஏமாற்றுவதற்காக சினிமாவுக்கு போகிறேன். "சினிமாவுக்கு போகிறேன்" என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு இசை அறிவு கிடையாது. சரியாக நடிக்க தெரியாது, பேசக்கூட தெரியாது. ஆனால் மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருந்தேன்.

Vijay Antony |

மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அதற்கு ஒரு எனர்ஜி பிறக்கும் என்று சொல்வார்களே.. அதுபோல், நான் மட்டுமே அதை நம்பிக் கொண்டிருந்தேன். இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன்." என்று கூறிய விஜய் ஆண்டனி தன்னுடைய திரைப்படங்களும், இயக்குநர்களும், அவர்களுடைய கதையும், உழைப்பும்தான் தன்னுடைய வெற்றிக்கும் காரணம் என்று குறிப்பிட்டார். மேலும் பேசியவர், “இயக்குனர் சசி சார்.. பிச்சைக்காரன் கதை சொல்லும்போது ஒரு பகுதியில் அவரே அழுதார். என்னிடம் சொல்லும்போதே அப்படி அழுதார் என்றால், அவர் அந்த கதையை எழுதும்போது எப்படி எமோஷனல் ஆகியிருப்பார். அதேபோல்தான் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனும் எமோஷனலாக அந்த கதையை எழுதியிருக்கிறார்” என்று சொன்ன விஜய் ஆண்டனி, இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனை பார்த்து “உங்கள் குழந்தைக்கு டெலிவரி ஆகியுள்ளது. இதைப் பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

நீங்கள் தான் இந்த விழா நாயகன். அட்லீ போல், லோகேஷ் கனகராஜ் போல் நீங்களும் விஜய், அஜீத் உள்ளிட்ட பெரிய நடிகர்களை இயக்குவீர்கள். அதற்கான தகுதி உங்களிடம் இருக்கிறது!” என்று குறிப்பிட்டிருந்தார். 

Vijay Antony |

இதனைத் தொடர்ந்து, “என்னதான் ஒரு கற்பனை இருந்தாலும், அந்த கற்பனையை நம்பி, மற்றவர்களுக்குதான் புகழ் வரும் என்று தெரிந்தும், அவர்களுக்காக பண முதலீடு செய்யும் தயாரிப்பாளர் முக்கியமானவர். அவர்தான் அடுத்த விழா நாயகன் அவருக்கும் நன்றி.” என்று குறிப்பிட்ட விஜய் ஆண்டனி, “தயாரிப்பாளரை அடுத்து விநியோகஸ்தர்கள் முக்கியமானவர்கள். இந்த திரைப்படத்தை கொண்டுசென்று சேர்த்த அவர்களுக்கு போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்கிற கவலை, அவர்களை விட எனக்கு பத்து மடங்கு இருந்தது. நான் வெளியே சொல்லிக் கொள்ளவில்லை. நான் இந்த படம் பண்ணுகிறேன். அடுத்த படம் பண்ணுகிறேன். ஆனால் அவர்கள் என்ன பண்ணுவார்கள் என்கிற சிந்தனை இருந்துகொண்டே இருந்தது, அவர்களுக்கு இந்த படம் வெற்றியடைந்து மகிழ்ச்சியை கொடுத்திருப்பது தான் முக்கியமானது. எனக்கு அதில் மகிழ்ச்சி. நன்றி கமல் போஹ்ரா சார், தனஞ்செயன் சார், பங்கஜ் போஹ்ரா சார்” என்று அவர்களுக்கு நன்றி சொல்லி விடைபெற்றார் விஜய் ஆண்டனி.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஷாக்கில் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஷாக்கில் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Rashmika-Vijay Net Worth: நாளை ரியல் ஜோடியாகும் ரீல் ஜோடி; ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு இவ்வளவா.?!
நாளை ரியல் ஜோடியாகும் ரீல் ஜோடி; ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு இவ்வளவா.?!
"ஹீரோ ஆக ஆசை இல்லை" - தீயாய் பரவும் குக் வித் கோமாளி புகழ் பேச்சு
Parijatham: மாத்திரையை கொடுத்து மடக்கு.. ஸ்ரீஜாவுக்கு ஐடியா கொடுத்த சிந்தாமணி - பாரிஜாதத்தில் இன்று
Parijatham: மாத்திரையை கொடுத்து மடக்கு.. ஸ்ரீஜாவுக்கு ஐடியா கொடுத்த சிந்தாமணி - பாரிஜாதத்தில் இன்று
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nallakannu: ஆயுதம் ஏந்தி.. போராட்டங்களால் நிறைந்த நல்லகண்ணு வாழ்க்கை; மீசையே வைக்காத காரணம் தெரியுமா?
Nallakannu: ஆயுதம் ஏந்தி.. போராட்டங்களால் நிறைந்த நல்லகண்ணு வாழ்க்கை; மீசையே வைக்காத காரணம் தெரியுமா?
Nallakannu Death: இவர்தான் மாமனிதன்..! நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?
Nallakannu Death: இவர்தான் மாமனிதன்..! நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?
Nallakannu: நல்லகண்ணு: மகள் காது குத்து முதல் விருதுப் பணம் வரை; வியக்க வைக்கும் தியாகம்!
Nallakannu: நல்லகண்ணு: மகள் காது குத்து முதல் விருதுப் பணம் வரை; வியக்க வைக்கும் தியாகம்!
Nallakannu Death: முடிவுக்கு வந்த நூற்றாண்டு சகாப்தம்.. விடைபெற்றார் தோழர் நல்லகண்ணு!
Nallakannu Death: முடிவுக்கு வந்த நூற்றாண்டு சகாப்தம்.. விடைபெற்றார் தோழர் நல்லகண்ணு!
Nallakannu: ’’சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி’’ தோழர் நல்லகண்ணுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!
Nallakannu: ’’சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி’’ தோழர் நல்லகண்ணுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!
Nallakannu History: கடைசி வரை எளிமை.. குணம் மாறாத தலைவன்.. நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு!
Nallakannu History: கடைசி வரை எளிமை.. குணம் மாறாத தலைவன்.. நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு!
Holiday Special Bus: 2 நாள் தொடர் விடுமுறை.! தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்- போக்குவரத்து கழகம் அறிவிப்பு
2 நாள் தொடர் விடுமுறை.! தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்- போக்குவரத்து கழகம் அறிவிப்பு
DMK vs Congress: ரெட்டை குதிரையில் சவாரி செய்யும் காங்.; ஒரு பக்கம் திமுக..சைடு கேப்பில் தவெக - திட்டம் பலிக்குமா.?
ரெட்டை குதிரையில் சவாரி செய்யும் காங்.; ஒரு பக்கம் திமுக..சைடு கேப்பில் தவெக - திட்டம் பலிக்குமா.?
Embed widget