படையப்பா பார்த்து கலைஞர் கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா..வைரமுத்து பகிர்ந்த சீக்ரெட்
ரஜினியின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று படையப்பா படத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி முதல் முறை பார்த்து என்ன சொன்னார் என்று தெரியுமா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அரசியல் பிரபலங்கள் , திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படையப்பா திரைப்படம் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வரும் நிலையில் படையப்பா படம் பார்த்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சொன்ன கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்
படையப்பா பார்த்து கலைஞர் ரியாக்ஷன்
படையப்பா படம் பற்றிய தனது பதிவில் வைரமுத்து இப்படி கூறியுள்ளார் " இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு பரபரப்புக் குறையாமல் வெளியாகிறது படையப்பா மூங்கில் குழாயில் அடைத்து மூடிப் புதைக்கப்பட்ட தேன் கால்நூற்றாண்டுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்படுகையில் வீரிய பானமாய் வெளிப்படுவது மாதிரி, காலம்கடந்தும் கலக்கவருகிறது படையப்பா நான் வெறியெடுத்துப் பாட்டெழுதிய படங்களுள் படையப்பாவும் ஒன்று 'வெற்றிக்கொடிகட்டு' பாடல் எப்போது கேட்டாலும் என் அத்துணை நரம்புகளும் பாம்புகளாய்ப் படமெடுக்கும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு சொல்கிறேன்: படத்தின் முதல் பிரதி முதலமைச்சருக்குப் போட்டுக் காட்டப்படுகிறது விஜயராகவா சாலையில் தேவி ஸ்ரீதேவி குறுந்திரையரங்கில் திரையீடு நிகழ்கிறது அந்நாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர், மேலும் சில அமைச்சர்கள், ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார் நான் மற்றும் சிலர் படம் பார்க்கிறோம் படம் நிறைந்தது கலைஞர் வெளியே வருகிறார்; யாரும் இல்லை தினத்தந்தி நிருபர் கங்காதரன் மட்டும் எப்படியோ துப்பறிந்து வந்துவிடுகிறார் “ஐயா! படம் எப்படி இருக்கிறது” என்று ஒரு வினாவை வீசுகிறார் சற்றும் இடைவெளி இல்லாமல் “படையப்பா; பழைய சாதனைகளை உடையப்பா என்றிருக்கிறது” என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறுகிறார் கலைஞர் அவர் வாக்குப் பொய்க்குமா? பலித்தது தன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ரஜினி வழங்கும் பாசப் பரிசு படையப்பா தங்கம் பழையதாகலாம்; விலை குறையுமா?"
இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு
— வைரமுத்து (@Vairamuthu) December 12, 2025
பரபரப்புக் குறையாமல்
வெளியாகிறது படையப்பா
மூங்கில் குழாயில் அடைத்து
மூடிப் புதைக்கப்பட்ட தேன்
கால்நூற்றாண்டுக்குப் பிறகு
தோண்டி எடுக்கப்படுகையில்
வீரிய பானமாய்
வெளிப்படுவது மாதிரி,
காலம்கடந்தும் கலக்கவருகிறது
படையப்பா
நான் வெறியெடுத்துப்… pic.twitter.com/DvXJppcI7E





















