மேலும் அறிய

Vairamuthu: காவிரி தாயே...நீ எங்கள் உரிமை...அதிகாரம்...பாலத்தில் நின்று கவிதை எழுதிய வைரமுத்து

தமிழ் மொழியின் புலமையால் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகை ஆண்டு வருபவர் வைரமுத்து.

காவிரி ஆற்றின் பாலத்தில் நின்று கவிப்பேரரசு வைரமுத்து கவிதை சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தமிழ் மொழியின் புலமையால் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகை ஆண்டு வருபவர் வைரமுத்து. அவர் பெயரை சொன்னாலே வெள்ளை ஜிப்பாவும், அவரின் தமிழும் தான் நம் அனைவரின் நினைவுக்கு வரும். 1980 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது என்னும் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பயணப்பட்டவர் தற்போது வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 

ஆரம்ப காலத்தில் இளையராஜாவுடன் கூட்டணியில் இருந்த அவர் பின்னாளில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்ததால் தான் தன்னுடைய தமிழ் சர்வதேச எல்லைகளை கடந்ததாக தெரிவித்திருந்தார். அந்த அளவுக்கு இவரது பாடல் வரிகள் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதில் காதல் ரசனையுடனே எழுதப்பட்டிருக்கும். முதல் மரியாதை, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால்,ரோஜா, தென்மேற்கு பருவக் காற்று, தர்மதுரை ஆகிய படங்களின் பாடல்களுக்காக வைரமுத்து தேசிய விருதும் வென்றுள்ளார். 

ஒவ்வொரு தலைமுறைக்கும் பாட்டெழுதி தன்னை புதுப்பித்துக் கொண்டே வரும் வைரமுத்து தற்போது திருச்சி காவிரி ஆற்றுப்பாலத்தில் நின்று வெள்ளம் கரை புரண்டு ஓடும் காவிரி நீரை பார்த்து கவிதை ஒன்றை வார்த்துள்ளார். திருச்சி
காவிரிப் பாலம்  நில்லாமல் ஓடும் காவிரியில் நின்றெழுதிய கவிதை என்ற கேப்ஷனில் இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பாய்ந்தோடும் காவிரியே..எங்கள் பரம்பரையின் தாய்ப்பாலே...வரலாற்றின் இரத்தமே..எங்கள் வயல்களில் துறவ சாப்பாடே...பல்லாண்டு தாண்டி நீ பெருக்கெடுத்து ஓடுவதாய் கேள்விப்பட்டு நான் கிறுக்கெடுத்து ஓடி வந்தேன்...கரிகாலன் கால் நனைத்தது நீதான்.. கவிஞர்களின் மீது திரவ முத்துக்கள் தெளித்தது நீதான்...ராஜராஜ சோழனின் வாள் முனையை...உழவனின் ஏர்முனையை தீட்டித் தந்தவள் நீதான்...

கரைதொட்டு பாய்ந்தோடும் காவிரியே...உன் அழகில் பறை கொட்டி பறை கொட்டி பாவி மனம் கூத்தாடும்..உடலோடு சேர்ந்தோடும் உயிர் உதிரம் நீ தாயே...கடலோடு சேராமல் கலனிகளில் சேர்வாயே...மலைத்தலய கடற் காவிரியே என கடியலூர் உருத்திரங்கண்ணன் முதல் காவிரி தாயே..காவிரி தாயே..காதலர் விளையாட பூவிரித்தாயே என கண்ணதாசன் வரை ஈராயிரம் ஆண்டுகளாய் ஓராயிரம் புலவர்களுக்கு பாடுபொருளாகியா பால் நதியே...நீ யாரோ இட்ட பிச்சை அல்ல...எங்கள் உரிமை...நீ அரசியலின் ஆசீர்வாதம் அல்ல...எங்கள் அதிகாரம்..உன் கால்களை துண்டிக்க அனுமதிக்க மாட்டோம்...அணைக்கட்ட விட மாட்டோம் என தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
Chennai Power Cut: சென்னையில நவம்பர் 25 இந்த இடங்கள்ல தான் மின் தடை ஏற்படப் போகுது.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில நவம்பர் 25 இந்த இடங்கள்ல தான் மின் தடை ஏற்படப் போகுது.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
10 மாவட்டங்களுக்கு இன்றும் டேஞ்சர்.! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெதர்மேன் விடுத்த அலர்ட்
10 மாவட்டங்களுக்கு இன்றும் டேஞ்சர்.! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெதர்மேன் விடுத்த அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
Chennai Power Cut: சென்னையில நவம்பர் 25 இந்த இடங்கள்ல தான் மின் தடை ஏற்படப் போகுது.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில நவம்பர் 25 இந்த இடங்கள்ல தான் மின் தடை ஏற்படப் போகுது.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
10 மாவட்டங்களுக்கு இன்றும் டேஞ்சர்.! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெதர்மேன் விடுத்த அலர்ட்
10 மாவட்டங்களுக்கு இன்றும் டேஞ்சர்.! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெதர்மேன் விடுத்த அலர்ட்
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
Tata Sierra: இதெல்லாம் டாடா கார்களில் இதுவரை இருந்ததே இல்லை - சியாராவின் டாப் 5 டக்கரான அம்சங்கள்
Tata Sierra: இதெல்லாம் டாடா கார்களில் இதுவரை இருந்ததே இல்லை - சியாராவின் டாப் 5 டக்கரான அம்சங்கள்
60 வயதிலும் தீராத ஆசை.. வீட்டுக்கே சென்று டார்ச்சர்.. முதிய பெண்மணி கொலை!
60 வயதிலும் தீராத ஆசை.. வீட்டுக்கே சென்று டார்ச்சர்.. முதிய பெண்மணி கொலை!
Embed widget