Urfi Javed | ஒருபக்கம் ட்ரெஸையே காணோம்... ஆடை சர்ச்சையில் மீண்டும் சிக்கிய உர்ஃபி ஜாவேத்!
ஸீ த்ரூ ஆடை அணிந்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் மும்பை சின்னத்திரை பிரபலம் உர்ஃபி ஜாவேத்.

ஸீ த்ரூ ஆடை அணிந்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் மும்பை சின்னத்திரை பிரபலம் உர்ஃபி ஜாவேத்.
ஓடிடித் தளத்தில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட நடிகை உர்ஃபி ஜாவேத். தான் அணியும் ஆடைகளால் அவ்வப்போது கவனம் ஈர்க்கும் இவர் அண்மையில் ஸீ த்ரூ ஆடை ஒன்றை அணிந்து ரசிகர்களை ஏங்கவிட்டுள்ளார்.
உர்ஃபி ஜாவேது என்ற பெயரைக் கேட்டவுடனேயே இளவட்டங்கள் உஃப்.. என்று பெருமூச்சு விடும் அளவிற்கு ஹாட் கேர்ள் அவர்.
தொலைக்காட்சி பிரபலமான உர்ஃபி ஜாவேத் 2016ல் படே பய்யா கி துல்ஹனியா என்ற தொடரில் அவ்னி பந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களைப் பெற்றார். அதன் பின்னர் சந்திரா நந்ஹினி, சாத் ஃபேரோ கி ஹீரா ஃபேரி, பெப்பன்னா, ஜிஜி மா, ஆயி மேரே ஹம்சஃபர் என பல தொடர்களில் நடித்து தனது ஃபேன்ஸ் கிளப்பை விஸ்தரித்து வைத்துள்ளார்.
பிக்பாஸில் கலந்து கொண்டார். அதன் மூலம் அவர் மீது இன்னும் இன்னும் அதிகமாக ஊடக வெளிச்சம் பாய்ந்தது. இந்நிலையில், அந்த வெளிச்சம் எல்லாம் பத்தாது என்பதுபோல் அவ்வப்போது தனது இன்ஸ்டா, சமூக வலைதள பகிர்வுகள் குறிப்பாக புகைப்படங்கள் மூலம் லைம் லைட்டுக்கு வருவார். ட்ரோல் ஆனாலும் பரவாயில்லை ஊடக வெளிச்சத்திற்கு வந்தால் போதும் என்று வரும் கேட்டகரி அவர். ராக்கி சாவந்த், பூனம் பாண்டே, ஸ்ரீரெட்டி வகையறாவில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் இவரை.
அப்படி மீண்டும் ஒரு ஹாட் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் உர்ஃபி. ஸீ த்ரூ உடையில் சில நிமிடங்கள் பூனை நடை நடக்கிறார். தூரத்தில் இருந்து பார்க்கும்போது அவர் ஆடை அணிந்திருக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் அவரது ஆடை உள்ளது.
View this post on Instagram
கிழிந்த ஆடை, ஒற்றை துண்டில் ஆடை என அணிந்து நெட்டிசன்களிடம் ட்ரோல் ஆவது தான் இவருக்கு மிகவும் பிடித்த செயல் என நினைக்கும் அளவிற்கு நடந்து கொள்கிறார்.
தன்னை ட்ரோல் செய்பவர்கள் குறித்து உர்ஃபி ஒருமுறை, "நான் இதை நினைத்தெல்லாம் கவலைப்படுவதே கிடையாது. அந்த முட்டாள் மக்கள் என்னை எப்போது தொந்தரவு செய்ததும் கிடையாது. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.. ஆனால் இது எனக்கு இடைஞ்சலா இருந்தது இல்லை. மீடியா தான் என்னை அவமானப்படுத்துகிறது "என்று தவற்றை ஊடகத்தின் பக்கம் திசை திருப்பிவிட்டார்.
ஆடை விஷயத்தில் இதுதான் நேர்த்தி, இது ஆபாசம் என்று சமூகம் தான் கட்டமைக்கிறது. ஆடை என்பது நாகரிக மனித சமூகம் சில உடல் உறுப்புகளை மறைக்க உருவாக்கியது. மறைப்பதை மறைத்து எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம். ஆடையால் ஒருவரின் ஒழுக்கத்தை மதிப்பிடுவது மோசமான பாகுபாடு எனக் கூறுகின்றனர் பாலின சமத்துவ செயற்பாட்டாளர்கள்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















