கஷ்டப்பட்டது நாங்க இவர் சீனுக்கே வரல...ஆர் ஜே பாலாஜியை வெளுத்து வாங்கிய திருப்பூர் சுப்ரமணியம்
திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கருப்பு பட இயக்குநர் ஆர் ஜே பாலாஜியை கடுமையாக விமர்சித்துள்ளார்

கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தடைபட்டபோது அதற்கு படக்குழு தரப்பில் சூர்யா மட்டுமே உதவி செய்ததாகவும் இயக்குநர் ஆர் ஜெ பாலாஜி இந்த வித உதவியும் செய்யவில்லை என்று திருப்பூர் சுப்ரமணியம் குற்றம்ச்சாட்டியுள்ளார். அதே நேரம் கருப்பு படம் வெற்றிபெற்றதும் அதற்கு தான் காரணம் என ஆர் ஜே பாலாஜி கொண்டாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் கருப்பு திரைப்படம் கடந்த மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படம் வரும் ஜூன் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தி வெளியாக உள்ளது. கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகும் நாளில் சில சவால்களை எதிர்கொண்டது. படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் படத்தில் முதலீடு செய்தபவர்களுக்கு பண பாக்கி இருந்ததால் படத்தை வெளியிடுவதில் தடை ஏற்பட்டது. நடிகர் சூர்யா இப்படத்தை வெளியிட தனது சம்பளத்தை திருப்பி அளித்த பின்னரே கருப்பு படம் வெளியானதாக கூறப்படுகிறது. பல சவால்களை கடந்து வெளியானாலும் கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து படதயாரிப்பு நிறுவனத்திற்கு லாபகரமான படமாக அமைந்துள்ளது.
ஆர் ஜே பாலாஜியை விமர்சித்த திருப்பூர் சுப்ரமணியம்
கருப்பு படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜியை விமர்சித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் " எந்த ஒரு பெரிய படமும் திட்டம்போட்ட நேரத்தில் முடிக்கப்படுவது இல்லை. கருப்பு கடந்த ஆண்டு தீபாவளிக்கு வர வேண்டிய படம் . இயக்குநர்கள் தயாரிப்பாளர்களிடம் 30 கோடி 40 கோடி என ஒரு பட்ஜெட் கொடுத்துவிட்டு 80 கோடி செலவு செய்கிறார்கள். இன்றைய சூழலில் ஒரு தயாரிப்பாளருக்கு பணம் வரக்கூடிய இடமே கிடையாது. ஒரு படம் முடியும் வரை தயாரிப்பாளர் தன்னுடைய பணம் மற்றும் ஃபைனான்சியர் பணத்தை முழுக்க முழுக்க சார்ந்திருக்கிறார். கருப்பு வெற்றிபெற்றதும் படத்தின் இயக்குநர் காலரை தூக்கிவிட்டு சுத்துகிறார். ஆனால் அந்த படத்தை வெளியிட அந்த இரண்டு நாள் நாங்கள் பட்ட கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும். சூர்யா சார் ஒருவரை தவிர அந்த படத்தின் சார்பில் இயக்குநரோ , பிற நடிகர்களோ , தொழில்நுட்ப கலைஞர்களோ யாருமே எந்த வித உதவியும் செய்யவில்லை. ஆனால் இயக்குநர் காருக்குள் உட்கார்ந்து அழுது வீடியோ போடுகிறார். இந்த படம் வெளியாக என்னுடைய பணத்தையும் போட்டிருக்கிறேன். அதில் 50 சதவீதம் தான் எனக்கு திருப்பி கிடைத்திருக்கிறது. " என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்
ப்பு படம் வெளியாகாத வருத்தத்தில் படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி எமோஷனலாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















