![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Meenakshi Ponnunga: விறுவிறுப்பான மீனாட்சி பொண்ணுங்க சீரியல்..! இன்றைய எபிசோடில் நடப்பது என்ன?
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
![Meenakshi Ponnunga: விறுவிறுப்பான மீனாட்சி பொண்ணுங்க சீரியல்..! இன்றைய எபிசோடில் நடப்பது என்ன? zee tamil meenakshi ponnunga serial today episode 157 highlights Meenakshi Ponnunga: விறுவிறுப்பான மீனாட்சி பொண்ணுங்க சீரியல்..! இன்றைய எபிசோடில் நடப்பது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/08/ab775e4dcdfb40f42a7751197ee3dcd21675845098267572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நீதிமணியை யமுனாவின் கல்யாணத்திற்கு போகக்கூடாது என்று சங்கிலியும் புஷ்பாவும் மிரட்டும் காட்சிகள் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
இன்றைய எபிசோட் அப்டேட்
இன்றைய எபிசோடில் நீதிமணிக்கு பத்திரிக்கை வைக்க சொல்லி சாந்தாவும், துர்காவும் மீனாட்சியிடம் சொல்கின்றனர். மகளுக்காக பத்திரிக்கை வைக்க நீதிமணி வீட்டுக்கு போவதாக மீனாட்சி சம்மதிக்கிறாள்.
View this post on Instagram
இந்த பக்கம் நீதிமணியை யமுனாவின் கல்யாணத்திற்கு போகக்கூடாது என்று சங்கிலியும் புஷ்பாவும் மிரட்டுகிறார்கள். மீனாட்சி துர்காவுடன் யமுனாவின் கல்யாண பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு நீதிமணியிடம் கொடுக்க செல்ல அங்கே புஷ்பா மீனாட்சியை அவமானப்படுத்தி பத்திரிக்கையை கிழித்து வீசுகிறாள். நீதிமணியும் கல்யாணத்துக்கு வர முடியாது என்று அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறான்.
மனம் உடைந்த மீனாட்சியை, துர்கா நாம் கோவிலுக்கு போகலாம் என்று அழைத்துச் செல்கிறாள். யமுனா அங்கு வர அவளிடம் நடந்த சம்பவத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கே நீதிமணி வருகிறான். புஷ்பாவுக்கு பயந்து அப்படி நடந்து கொண்டதாக கூறி மன்னிப்பு கேட்கிறான்.
அதிர்ச்சி தந்த எபிசோட்:
யமுனாவை ஆசீர்வாதம் செய்து, நீதிமணி தன் தங்க சங்கிலியை யமுனாவிற்கு கொடுக்கிறான். அதன் பிறகு ரங்கநாயகி வீட்டிற்கு மீனாட்சியும் துர்காவும் பத்திரிக்கை வைக்கச் செல்ல அங்கே பூஜா அவர்களை அவமானப்படுத்துகிறாள். பின் மீனாட்சி ரங்கநாயகிக்கு பத்திரிக்கை வைக்க அங்கு ரங்கநாயகியும் அவர்களை அவமானப்படுத்துகிறாள். செல்வமுருகன் சமாதானப்படுத்தி வெற்றியை கல்யாணத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறுகிறார்.
இந்த பக்கம் கார்த்திக்கின் அம்மா கோகிலா, நகை விஷயமாக மீனாட்சி வீட்டில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று சொல்ல, கல்யாணத்தில் மீண்டும் சிக்கல் ஏற்படுமோ, என்று கார்த்திக் அதிர்ச்சி ஆகும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)