Karthigai Deepam: குடும்பமே சேர்ந்து கொடுத்த சாட்டையடி.. வலியில் துடிதுடிக்கும் சந்திரகலா!
கார்த்திகை தீபம் சீரியலில் சந்திரகலாவிற்கு பேய் பிடித்த நிலையில், இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சந்திரகலாவுக்கு ரத்த பந்தம் உள்ளவர்கள் கையால் சாட்டையடி கொடுக்க வேண்டும் என்று சொல்லிய நிலையில், இன்று நடக்கபோவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
போதும்.. போதும் என கத்திய சந்திரகலா:
அதாவது, சாமுண்டீஸ்வரி சந்திரகலாவை குணமாக்க வேண்டும் என்பதால் சாட்டையால் அடிக்க, சந்திரகலா வலியில் துடிக்கிறாள், அடுத்து ரேவதி என்னையா என் புருஷன் கிட்ட இருந்து பிரிக்க பாக்குற என்ற கோபத்தில் இரண்டு அடி கொடுக்கிறாள். சந்திரகலா போதும் போதும் என கத்துகிறாள்.
சிவனாண்டி தரும் ஐடியா:
இதனையடுத்து, இரவு முழுவதும் சந்திரகலாவை கோவிலில் கட்டி வைக்க வேண்டும் என்று சொல்லி விட எல்லாரும் கிளம்பி சென்ற பிறகு சிவனாண்டி சந்திரகலாவை சந்தித்து என்கூட போறேனு சொல்லிடு, மத்ததை அப்புறம் பாத்துக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















