Karthigai Deepam: கர்ப்பமாக இருக்கும் ரோகிணி.. சாமுண்டீஸ்வரிக்கு ஷாக் தந்த ஜோசியர் - இன்று நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: ரோகிணி கர்ப்பம் இருப்பதை சாமுண்டீஸ்வரி அறிந்த நிலையில், அடுத்து என்ன நடக்கப்பாேகிறது? என்பதை கார்த்திகை தீபம் சீரியலில் இன்று காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரோகினியின் கர்ப்பம் குறித்து சாமுண்டீஸ்வரி அறிந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கர்ப்பத்தை மறைத்த ரோகிணி:
அதாவது, ரோகினி மற்றும் ரேவதி ஹாஸ்பிடல் இருந்து வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி, எங்க போயிட்டு வரீங்க? என கேட்க ப்ரெண்டு வீட்டுக்கு என சொல்லி சமாளிக்கின்றனர்.
சாமுண்டீஸ்வரி பொய் சொல்லாதீங்க எல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சு.. இவ்வளவு நாளா நீ உன்னோட கர்ப்பத்தை என்கிட்ட மறைச்சிருக்க என்று கோபப்பட, ரோகினி இல்லம்மா ரொம்ப நாள் கழிச்சு கர்ப்பமாகி இருக்கிறதால பொறுமையா சொல்லலாம்னு இருந்தேன் என சொல்கிறாள்.
ஷாக் தந்த ஜோசியர்:
பிறகு ஜோசியரை வரவைத்து கேட்டு விடலாம் என்று சொல்லி அழைக்க, வீட்டுக்கு வந்த ஜோசியரின் குழந்தையை கடத்தி வைத்து சிவனாண்டி நான் சொல்ற மாதிரி சொல்லணும் என மிரட்டி ஜோசியரை பொய் சொல்ல வைக்கிறான். ஜோசியர் சொன்னதைக் கேட்டு சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























