Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
Karthigai Deepam: ராஜா சேதுபதி திடீரென கிராமத்திற்கு வந்த சூழலில் அடுத்தடுத்து நடக்கப்போகும் திருப்பங்களை கார்த்திகை தீபத்தில் காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கோவிலில் அம்மன் கண்ணில் ரத்தம் வடிய அனைவரும் அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி:
அதாவது, கோவிலில் கும்பாபிஷேகம் நடக்காததால் தான் இப்படி எல்லாம் நடப்பதாக அனைவரும் சொல்ல யாரும் எதிர்பாராத விதமாக ராஜா சேதுபதி வருகை தருகிறார். கூடிய சீக்கிரம் கும்பாபிஷேகம் நடக்கும். என் பேரன் நடத்தி கொடுப்பான் என வாக்கு கொடுக்கிறார்.
பிறகு தாத்தா பரமேஸ்வரி பாட்டியை சமாதானம் செய்து கார்த்தியை தனியாக அழைத்துச் சென்று இன்னும் எவ்வளவு நாள் நான் உயிரோட இருப்பேனு தெரியல, அதுக்குள்ள இந்த கும்பாபிஷேகம் நடக்கணும் என வருத்தப்படுகிறார்.
சவால் விட்ட சாமுண்டீஸ்வரி:
சாமுண்டீஸ்வரி வீட்டில் ராஜராஜ சேதுபதியின் வருகையை எதிர்பார்க்கவில்லை என புலம்புகின்றனர். அதைத்தொடர்ந்து வீட்டுக்கு கல்யாண பத்திரிக்கை வர குலதெய்வ கோவிலில் வைத்து பூஜை செய்ய முடிவெடுக்கின்றனர். குலதெய்வம் கோவிலில் பூஜை செய்ய முதல் பத்திரிக்கையை ராஜா சேதுபதிக்கு கொடுக்க.. கொடுக்க வேண்டிய இடத்துல சரியா கொடுத்திருக்கீங்க என கார்த்திக் சொல்கிறான்.
மேலும் கல்யாண பத்திரிகையில் மாப்பிள்ளையின் பெயராக என்னுடைய பெயர்தான் இருக்கும் என சாமுண்டீஸ்வரிக்கு ஷாக் கொடுக்க அவள் மருதுவுடன் திட்டமிட்டபடி கல்யாணம் நடக்கும் சவால் விடுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















