மேலும் அறிய

நெஞ்சை உருக்கும் பேரிடர்!  கேரள நிலச்சரிவுக்கு 50 லட்சம் நன்கொடையாக வழங்கிய சூர்யா குடும்பம்!

கேரள வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிலச்சரிவால் ஏராளமானோர் சிக்கி தவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக நன்கொடை வழங்கியுள்ளனர் சூர்யா குடும்பத்தினர்.

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. மேப்பாடி, சுரல்மலா மற்றும் முண்டக்கை உள்ளிட்ட பகுதிகள் நிலச்சரிவால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அப்படி ஒரு ஊரே இருந்த இடம் தெரியாத அளவுக்கு நிலச்சரிவு மற்றும் கடுமையான மழையால் அடித்து செல்லப்பட்டுள்ளன.

நெஞ்சை உருக்கும் பேரிடர்!  கேரள நிலச்சரிவுக்கு 50 லட்சம் நன்கொடையாக வழங்கிய சூர்யா குடும்பம்!

இந்த நிலச்சரிவில் சிக்கி 280க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மண்ணுக்குள் சில உடல்கள் புதைந்து இருப்பதால் இந்த உயிரிழப்பானது மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பலரின் நிலையும் என்ன என்பதே தெரியாமல் தவித்து வருகிறார்கள் மக்கள். இந்த நிலச்சரிவால் கேரளம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

கடந்த மூன்று நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து கொண்டே இருப்பதால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன.  மீட்பு படையினர், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் இந்த மீட்டு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த உடல்களை பார்க்கையில் அனைவரையும் அது நிலை குலைய வைக்கிறது. ஒட்டுமொத்த வயநாடு பகுதியே ஆறு போல காட்சி அளிக்கிறது. 

இந்த நிலச்சரிவால் சிக்கிய மக்களுக்கு பல தரப்பில் இருந்தும் நன்கொடை வந்து கொண்டு இருக்கின்றன. கேரள அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பொது மக்களிடம் நன்கொடை வசூலித்து வருகிறது. அந்த வகையில் திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகளும் அவர்களால் முடிந்த நன்கொடை தொகையை வழங்கி வருகிறார்கள். நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாயையும், நடிகை ராஷ்மிகா மந்தனா 10 லட்சம் ரூபாயையும் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர். 

நெஞ்சை உருக்கும் பேரிடர்!  கேரள நிலச்சரிவுக்கு 50 லட்சம் நன்கொடையாக வழங்கிய சூர்யா குடும்பம்!


அந்த வகையில் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா மூவரும் சேர்ந்து கேரளாவின் நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக ரூபாய் 50 லட்சத்தை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கியுள்ளனர். மேலும் நிலச்சரிவால் உயிர் இழந்தவரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்டனர். பலரும் இந்த நிவாரண நிதிக்காக பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். 

பல உயிர்களை பலி வாங்கிய நிலச்சரிவுக்கு தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொண்டார் நடிகர் சூர்யா. "வயநாடு நிலச்சரிவில் சிக்கிய குடும்பங்களை நினைக்கையில் நெஞ்சை உலுக்குகிறது. மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உதவி செய்யும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் மற்றும் களத்தில் இறங்கி உதவி செய்யும் மக்களுக்கு நான் மரியாதையுடன் தலைவணங்குகிறேன்" என குறிப்பிட்டு இருந்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Embed widget