மேலும் அறிய

Ethirneechal: கைது செய்யப்பட்ட குணசேகரனும் தம்பிகளும்... எதிர்நீச்சலில் புது திருப்பம் 

Ethirneechal Oct 9 : விசாலாட்சி அம்மா மகன் குணசேகரனை பற்றி பெருமையாக பேச போலீஸ் வந்து அவர்களை கைது செய்து அழைத்து போகிறது. இன்று எதிர்நீச்சலில் என்ன நடக்கப்போகிறது என்று ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal)தொடரில் கடந்த வாரம் புதிய ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்த பிறகு வீட்டின் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. இதுவரையில் துணிச்சலாக பேசி வந்த மருமகள்களுக்கு எல்லாம் ஆப்பு வைப்பது போல முரட்டுத்தனமான குணசேகரனாக வேல ராமமூர்த்தி கதாபாத்திரத்தின் குணாதிசயம் மாற்றப்பட்டு வருகிறது. அவரை பார்க்கும் போது வில்லனை பார்ப்பது போலவே இருக்கிறது என்பது ரசிகர்களின் கருத்து.

 

Ethirneechal: கைது செய்யப்பட்ட குணசேகரனும் தம்பிகளும்... எதிர்நீச்சலில் புது திருப்பம் 

நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடில் அப்பத்தா மருமகள்கள் அனைவரையும் உட்கார வைத்து பேசி கொண்டு இருக்கிறார். "குணசேகரன் வேற ஏதோ பெரிய பிளான் செய்து தான் வந்து இருக்கிறான். என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் அவனுடைய அடுத்த டார்கெட் நான் தான். என்னுடைய 40 % ஷேரை எப்படி வாங்கலாம் என யோசித்து கொண்டே தான் இருப்பான். அதை எப்படி சமாளிக்கும் என்பது எனக்கு தெரியும்" என்கிறார் அப்பத்தா.

குழந்தைகள் அனைவரும் நீங்கள் எல்லாரும் இந்த வீட்டை விட்டு போங்க என சொல்லவும் "வீட்டை விட்டு போனாலும் நமக்கு வேறு வழியில் குடைச்சல் கொடுத்து கொண்டு தான் இருப்பார்கள். உங்களை வைத்து மிரட்டி எங்களை வர வைப்பார்கள். உங்களை எங்களுடன் அழைத்து சென்றால் அப்போது தான் என்னுடைய வாரிசு என பாசத்தை பொழிவார்கள். இங்கு இருந்தே போராடுவது தான் அதற்கு ஒரே வழி" என்கிறாள் ஈஸ்வரி.

 

Ethirneechal: கைது செய்யப்பட்ட குணசேகரனும் தம்பிகளும்... எதிர்நீச்சலில் புது திருப்பம் 
கதிர் ஞானம் மற்றும் கரிகாலன் உட்கார்ந்து விசாலாட்சி அம்மாவின் சமையலை ஆஹா ஓஹோ என பாராட்டி கொண்டு இருக்க, அந்த நேரத்தில் நந்தினி மாடிக்கு வந்ததால் அவளை வீணா வம்புக்கு இழுத்து அசிங்கப்படுத்துகிறான் கதிர். அவளுக்கு சப்போர்ட்டாக வந்த ஈஸ்வரி ரேணுகாவையும் மரியாதை குறைவாக பேசுகிறான். "எங்களுக்கு மரியாதை கொடுப்பதே கிடையாது, அப்பத்தாவை ஏற்கனவே வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிட்டே அடுத்து யார் உன்னோட அம்மாவையும் மரியாதை இல்லாம பேச போறீயா?" என ஈஸ்வரி கதிரிடம் கேட்கிறாள்.

கதிரின் பேச்சு ஓவராக போக நந்தினி எதிர்த்து பேச அவளை அறைந்து விடுகிறான் கதிர். இதை பார்த்த தாரா, கதிரை எதிர்த்து பேச அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அங்கிருந்து அனைவரும் கிளம்புகிறார்கள்.

நந்தினி அவர்களின் நிலையை நினைத்து வேதனைப்படுகிறாள். "நம்மால் ஒண்ணுமே செய்ய முடியாது. நாம் எதற்குமே லாக்கி இல்லை. எங்களை மன்னித்து விடு ஜனனி" என அவள் காலில் விழுந்து மன்னித்து கேட்கிறாள் நந்தினி. "நீ உன்னுடைய வாழ்க்கையை பார்த்துக் கொண்டு போயிருக்கலாம். இங்க வந்து இப்படி எங்களால கஷ்டப்பட்டு நிக்குற" என நந்தினி சொல்ல "நான் இது வரைக்கும் ஏமாந்ததா நினைக்கவே இல்லை. ஆனா இப்போ தான் நினைக்கிறேன். நீங்கள் இப்படி அவநம்பிக்கையுடன் பேசும்போது தான் நான் தோற்று விட்டதாக நினைக்கிறேன்" என்கிறாள் ஜனனி. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

மருமகள்களிடம் விசாலாட்சி அம்மா பெரியவனை பற்றி பெருமையாக பேசுகிறார் "ஏய் முன்னால மாதிரி நீங்க அவன் கிட்ட நக்கலும் நையாண்டியும் பண்ணறது எல்லாம் இனிமே முடியாது. சிங்கம் போல வந்து இருக்கான்.  பாத்தீங்களா ஈஸ்வரி வாங்கினத" என்கிறார்.

 

Ethirneechal: கைது செய்யப்பட்ட குணசேகரனும் தம்பிகளும்... எதிர்நீச்சலில் புது திருப்பம் 

வீட்டுக்கு போலீஸ் வருகிறது. கதிர் அவர்களை பார்த்து "வாங்கினது பத்தலயா?" என்கிறான். "வாங்கினதை டபிள் மடங்கா திருப்பி கொடுக்குறதுக்கு தான் வந்து இருக்கேன்" என்கிறார் இன்ஸ்பெக்டர். அவரை பார்த்து குணசேகரன் மிரட்ட "போன போகுது விட்டுட்டு போகலாம் என பார்த்தேன். அண்ணனும் தம்பிகளும் சேர்ந்துக்கிட்டு எகிறீங்களா... விடமாட்டேன் உங்கள" என சொல்லி குணசேகரன், கதிர் மற்றும் ஞானத்தையும் அரெஸ்ட் செய்து அழைத்து செல்கிறார்கள் போலீஸ்காரர்கள். அதை மொத்த குடும்பம் நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இறக்குகிறது.

 

இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal)எபிசோடுக்கான ஹிண்ட். 

தலைப்பு செய்திகள்

Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
SENTHIL BALAJI vs TVK : கைதா.? ஜாமீனா.? செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
கைதா.? ஜாமீனா.? செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
SENTHIL BALAJI vs TVK : கைதா.? ஜாமீனா.? செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
கைதா.? ஜாமீனா.? செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
TNEB Employees Allowance: மின் வாரிய ஊழியர்களுக்கு குஷி.! ரூ.10,000 அள்ளிக்கொடுக்கும் அரசு-வெளியான முக்கிய அறிவிப்பு
மின் வாரிய ஊழியர்களுக்கு குஷி.! ரூ.10,000 அள்ளிக்கொடுக்கும் அரசு-வெளியான முக்கிய அறிவிப்பு
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Embed widget